பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள் நடைபெற்று வரு கின்றன. ஏற்கனவே பலர் இதில் பலியாகியுள்ளனர். நிலைமை மேலும் ஏராளமானோர் இறக்கக் கூடிய விதத்திலும் மக்களுக்கு துன்ப துயரங்களை ஏற்படுத்தக் கூடிய விதத்திலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த மோதல் நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேலை ஆட்சி செய்து வரும் அதிதீவிர வலதுசாரி நேதன் யாகு அரசாங்கம் பாலஸ்தீனப் பகுதிகளை வகைதொகையின்றி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது, மேற்குக் கரையில் யூதர்களின் வசிப்பிடங்களை நிறுவிக்கொண்டி ருக்கிறது. இந்த ஆண்டில், இந்த மோதலுக்கு முன்புவரை, 40 குழந் தைகள் உட்பட 248 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை, இரு நாடுகள் தீர்வுக்கான (two nation solution) ஐ.நா.பாதுகாப்பு கவுன் சில் தீர்மானத்தினை அமல்படுத் தப்படுவதை உத்தரவாதப்படுத்திட வும், பாலஸ்தீனத்தின் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதை யும், பாலஸ்தீனப்பகுதிகளில் இஸ் ரேல் சட்டவிரோதமாக மக்கள் வசிப்பிடங்களை ஏற்படுத்துவதை யும் விலக்கிக் கொள்வதற்கும், பாலஸ்தீனர்களின் தாய் நாட்டுக் கான சட்டப்பூர்வ உரிமைகளையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். ஐ.நா.சபை தீர்மானத்தின் அடிப்படையில் பாலஸ்தீனத் திற்கு, கிழக்கு ஜெருசலேம் அதன் தலைநகர் என்பது அமல்படுத்தப் பட வேண்டும். இந்த மோதலை உடனடி யாக நிறுத்துவதற்கும், ஐ.நா. தீர்மானத்தை அமல்படுத்துவ தற்கும் இந்தியா உட்பட ஐ.நா. சபை யும் சர்வதேச சமூகமும் உத்தரவா தப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)