மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் கார ணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,511 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,051 கன அடியாக அதிகரித்துள் ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயி ரம் கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று காலை 119.38 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.48 டி.எம்.சியாக உள்ளது.
ஒரே பயண அட்டை: மெட்ரோ திட்டம்
மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் பேருந்தில் பயணிக்கும் வகை யிலான பயண அட்டை வழங்கும் திட்டம் டிசம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு, ஒரே நாடு; ஒரே அட்டை என்றத் திட்டத்தின் அடிப்படையில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ, புறநகர் ரயில்கள், நகரப் பேருந்தில் பயணிக்கவும், வாகன பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வகை யிலான அட்டையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது, இந்த அட்டை சென்னை மெட்ரோவிலும் அறிமுகமாக உள்ளதாகவும், இதுதொடர்பாக வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்களை பாதி செலவில் செலுத்த தனியார் நிறுவனம் திட்டம்
அடுத்த ஆண்டில் செயற்கைக்கோள்களை பாதி செலவில் விண் ணில் செலுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் திட்டமிட்டுள்ளது. நிதி திரட்டப்பட்ட 68 மில்லி யன் டாலர்களை அடுத்த இரு திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களோடு ஒப்பிடுகை யில், ராக்கெட் ஏவும் செலவு 50 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் ஸ்கைரூட் தெரிவித்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் போன்ற பிராட்பேண்ட் சேவைகளை வழங்க வணிக நிறுவனங்கள் தங்கள் நெட் வொர்க்குகளை விரிவுபடுத்துவதால், வரவிருக்கும் ஆண்டுகளில் ஆயி ரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளது.
ஆன்லைன் விளையாட்டு: பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்த நல்லூரில் வசித்து வருபவர் ஒடிசாவைச் சேர்ந்த பந்தனமாஜி. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்ததால் மன உளைச்சளில் இருந்த இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளி களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சுகாதாரத் துறை ஊழியர்கள் வழங்கிய இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாட்சாகு பிளாக் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள படாவ் துணை மையத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் குழு கெரானிபதர் கீழ்நிலைப் பள்ளியின் 75 மாணவர்களுக்கும், நிமாலியா கீழ்நிலைப் பள்ளியின் 26 மாண வர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளது. இந்நிலை யில் மாத்திரை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்தில், பள்ளிகளிலிருந்து மாண வர்கள் சிலர் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக சோனாரி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேலும் 48 குழந்தைகள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் காய்கறி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
சென்னை, நவ. 27- வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனினும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் 16 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப் படுகின்றன. இதில், மூன்றரை லட்சம் ஹேக்டர் அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய அளவில் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ருட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய் கறிகளின் விளைச்சலும் குறைந்திருந்தது. மழையால் சாகுபடி செய்த காய்கறி செடி களும், அறுவடைக்கு தயாரான காய்கறி களும் அழுகின. இதனால், வெங்காயம், தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும், பெரும் பாலான காய்கறிகள் கிலோ 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைஇல்லாத நிலையில் காய்கறி களின் விளைச்சல் அதிகரிக்கத்தொடங்கி யுள்ளது. சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்ப தால் காய்கறிகள் விலை கணிசமாக குறைந் துள்ளது. கடந்த மாதம் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது ரூ.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெங்கா யம் 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடும் பனி மூட்டம்: விமான சேவை பாதிப்பு
ஆலந்தூர்,நவ.27- சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் ஞாயிறன்று (நவ27) காலை கடுமையான பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஞாயிறன்று காலை 6:30 மணிக்கு மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், கடும் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளி வாக தெரியாததால், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதே போல் காலை 6.55 மணிக்கு குவைத்தில் இருந்து 182 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் நீண்ட நேரமாக வானில் வட்ட மடித்தது.பின்னர் அந்த விமானம் ஐதரா பாத்துக்கு திருப்பி தரையிறங்க வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. இதே போல் சென்னையில் இருந்து புறப்படும் ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பாமக கோரிக்கை
சென்னை, நவ. 27- ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராம தாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி ஞாயிறன்று காலாவதியாகிறது. அதற்கு மாற் றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக் காததே இந்த நிலைக்கு காரணம். இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 213(2) (ஏ) இன்படி சட்டப் பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலா வதியாகி விடும். அக்டோபர் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்று டன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட் டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கி விடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள் ளனர். இதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவ சியம். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்ற ப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட் டுள்ளது. இதுகுறித்த ஆளுநரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. இதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்பு தல் அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
நாகை, திருவாரூரை புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகம் இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை, நவ.27- மோடியின் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகமும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் குறிப்பாக தமிழ் நாட்டை வஞ்சித்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்த ரசன் விடுத்துள்ள அறிக்கையில், நீடாமங்கலம் மேம்பாலம், ரயில் பராமரிப்பு மையங்கள், சில ரயில்க ளின் எல்லை நீடிப்பு, நிறுத்தப் பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கை களை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதும் மோடி அரசின் வழக்கமாகியுள்ளது. வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால் போன்ற முக்கி யத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தளங் களுக்கு மக்கள் வந்து செல்வதை தடுக்கும் செயலில் ரயில்வே நிர்வாகம் செயல்படுகிறது.இந்த கோரிக்கை களுக்கு தீர்வு காண முயற் சிக்காத தெற்கு ரயில்வே நிர்வா கத்தையும்,ரயில்வே அமைச்ச கத்தையும் சிபிஐ மாநில செயற் குழு வன்மையாகக் கண்டிக்கிறது