- தற்போதைய காலகட் டத்தில் சினிமா, கவிதை, எழுத்து பற்றி பேச விரும் பினால் சிறுபான்மை யினர் பற்றிதான் அதிகம் பேச முடியும். காரணம் சிறுபான்மையினர்தான் அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறார்கள். பாலி வுட்டில் (இந்தி திரை யுலகு) சிறுபான்மையின ரும், இஸ்லாமியர்கள் தான் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கலைத்துறையில் சிறு பான்மையினர் பங்க ளிப்பை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என நாக்பூரில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
- காங்கிரஸ் தலைவர் தேர்த லில் களமிறங்கியுள்ள மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய 2 தலைவர்களுக்கும் மக்க ளிடையே நன்மதிப்பு உள் ளது. 2 தலைவர்களும் மக்களை புரிந்துகொள் ளும் நபர்கள் ஆவர். காங்கிரஸ் தலைவர் களாக தேர்ந்தெடுக்கும் நபர் ரிமோர்ட் கண்ட் ரோல் ஆக செயல்படமாட் டார்கள் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறினார்.
- சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 5 மாணவி களை பாலியல் பலாத் காரம் செய்ததாக 37 வயது தனியார் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள் ளார்.
- இந்து மதத்திற்கு முன், இந்து மத தர்மம் இருந் தது. இது ஒரு வாழ்க்கை முறை, ஒரு தத்துவம் போன்றது. நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால் நானும் இந்து அல்ல. ஆனால் தர்மத்தை எடுத்துக் கொண்டால், நான் மிக வும் இந்து என இயக்கு னர் ராஜமவுலி பேசினார்.
- இஸ்ரேல் நாட்டின் மேற்கு கரை பகுதியான ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாது காப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்கள் குழு விற்கும் இடையே துப் பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 2 பாலஸ்தீ னர்கள் உயிரிழந்தனர்.
- பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் தந்தை லாலு பிரசாத் யாதவ் அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் நிலம் மோசடி செய்தது தொடர் பாக அவரது தனிச்செய லாளரிடம் சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தி னர்.
- ரஷ்யாவின் விமானப் படைத் தலைவர் உக் ரைனில் ரஷ்ய ராணுவம் மேற்கொள்ளும் அனை த்து பகுதிகளுக்கும் அவர்தான் தலைமை தளபதியாக செயல்படு வார் என ரஷ்ய பாது காப்பு அமைச்சகம் அறி வித்துள்ளது.
- ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் வீட்டில் வைக் கப்பட்டிருந்த எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்த தில் 3 குழந்தைகள் உட் பட 4 பேர் உயிரிழந்தனர். அருகில் இருந்த வீடு களிலும் சிலிண்டர் வெடிப்பு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய நிலையில், 16 பேர் காய மடைந்தனர்.
- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 240 இடங்களில் இந்தக் கூட்டணிக்கு 67 இடங்களும், எதிரணிக்கு 53 இடங்களும் கிடைத்தன. பல்கேரிய சோசலிஸ்டு கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
- செர்பியாவில் மருத்துவத்துறை ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. நோயாளிகளுக்கு ஆபத்தான சூழலை இது உருவாக்கியுள்ளதோடு, ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் பணியே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் அனைத்து மக்களுக்கான திட்டமாக இல்லாமல், நிரந்தர வேலையில் இருப்பவர்கள் மட்டுமே பலன் பெறும் வகையில் இருக்கிறது.
- 2022 ஆம் ஆண்டில் தங்கள் நாடுகளில் காலரா நோய் பரவியதாக 27 நாடுகள் அறிக்கை அளித்துள்ளன என்று உலக சுகாதாரக் கழகத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேஸ் தெரிவித்துள்ளார். “வெறும் நோய்ப் பரவல் என்று மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. தற்போது பரவியுள்ள நோய் ஏராளமான உயிர்களைப் பலிவாங்கியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.