“டாக்டர் அம்பேத்கர் உரு வாக்கிய அரசிய லமைப்புச் சட்டத்தின் மீது தான் பதவிப் பிர மாணம் எடுத்துள்ளார் என்பதை பிரதமர் மோடி நினைவில் கொள்ள வேண்டும். அரசி யலமைப்பை மாற்றவோ அல்லது அழிக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என, பொது சிவில் சட்டம் அமல் படுத்துவதற்கு ஆதர வாக பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயல் உறுப்பினர் ஆரிப் மசூத் கண்டனம் தெரிவித்துள் ளார்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் சூரஜ் குமார் சென்ற இருசக்கர வாகனம் கர்நாடக மாநி லம் மைசூரு அருகே குண்ட்லுபேட் அருகே டிராக்டரை முந்தி செல்ல முயன்ற பொழுது விப த்தில் சிக்கியது. இந்த விபத்தில் சூரஜ் குமார் வலது காலை இழந்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மந்தமாக வெப்பநிலை இருந்த நிலையில், செவ்வா யன்று 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்தி யுள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை வரை நீட்டிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் புனரமைப்பு தொடர்பாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) சிறப்பு தணிக்கையை நடத்துவார் என துணை நிலை ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
“எந்த வடிவ கிரிப்டோகரன்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.கிரிப்டோகரன்சி விவகாரத்தில் தயவுசெய்து விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா டுவிட்டரில் நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகச் செய்திகள்
லெபனானின் தெற்குப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை ஹெஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி மடக்கியிருக்கிறார்கள். லெபனானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் வான்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு ஆளில்லா விமானத்தை ஹெஸ்புல்லா இடைமறித்து வீழ்த்தியது.
சூடானில் நடைபெற்று வரும் சண்டை 11ஆவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. கார்டோம் நகரின் தென்பகுதியில் உள்ள ஏராளமான ஆயுதங்கள் அடங்கிய காவல்படைப் பிரிவின் தலைமையகத்தைக் கைப்பற்றி விட்டதாக அந்நாட்டின் துணை ராணுவப்படை அறிவித்திருக்கிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையிலான சண்டையால் 25 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்சாரத்தை உருவாக்கும் ஏற்பாடுகளை நாடு முழுவதும் பெரிய அளவில் செய்ய வியட்நாம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜப்பானின் சுமிடோமோ நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். வியட்நாமில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால், இது ஒரு பெரிய சந்தையாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த கூட்டு ஏற்பாட்டுக்கு ஜப்பான் நிறுவனமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.