states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. ராஜஸ்தானின் பெரும் பாலான மாவட்டங்களில் 8-18 வயதுடைய சிறு மிகள் முத்திரைத்தாள் மூலம் விற்கப்படுவதாக வும், இதற்கு உடன்படாத சிறுமிகளின் தாய்மார்கள் பாலியல் பலாத்காரத் திற்கு உட்படுத்தப்படுவ தாகவும் ராஜஸ்தான் அர சுக்கு தேசிய மனித உரி மைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 4 வாரங் களுக்குள் விரிவான அறி க்கை சமர்ப்பிக்குமாறு ராஜஸ்தான் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச் ஆர்சி) உத்தரவிட்டுள் ளது.
  2. தமிழ்நாட்டுடன் கன்னி யாகுமரி இணைந்த தினமான நவம்பர் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 12-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  3. மும்பையின் காட்கோப ரில் உள்ள ஆச்சார்யா அத்ரே மைதானத்தில் சாத் பூஜையை நடத்த தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு குழுவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
  4. கன்னியாகுமரி மாவட் டம் இரணியலைச் சேர்ந்த  15 வயது சிறுமியை பாலி யல் வன்கொடுமை செய்த தனேஷ் என்பவ ருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  5. இந்திய விமானப்படைக் கான சி-295 போக்கு வரத்து விமானம் டாடா-ஏர்பஸ் நிறுவனத்தால் குஜராத்தில் தயாரிக்கப்பட உள்ளது.
  6. உகாண்டாவில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியொன்றில் திடீரென்று தீப்பிடித்தது. அதில் 11 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ப ட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தில் 26 பார்வை மாற்றுத் திறனாளிக்குழந்தைகள் தங்கிப் படித்து வந்தனர். திடீர் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். 
  7. அர்ஜெண்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பொதுப்பணி தொடர்பான இரண்டு வர்த்தகர்களிடம் இருந்து சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தனது தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருக்கிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அரசியல் ரீதியில் பழிவாங்கவே முன்னாள் ஆட்சியாளர்களால் இந்த வழக்கு பதியப்பட்டது என்று கிறிஸ்டினா தரப்பில் கூறப்பட்டது.
  8. ஜப்பானின் மத்தியப்பகுதியில் உள்ள சுருகா அணுமின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தனது ஆய்வை மீண்டும் துவங்கப் போவதாக அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆய்வு நடந்து கொண்டிருந்த வேளையில், சில விபரங்களைத் திருத்தி எழுதியதாக உற்பத்தி நிலைய நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆய்வு நடந்தால்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் திறக்கப்படுமா அல்லது இல்லையா என்பது தெரிய வரும்.