states

img

குமரியில் தொடர் கன மழைக்கு 6 வீடுகள் சேதம் 3 வீடுகள் தரைமட்டம்; வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

நாகர்கோவில், அக்.27- குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததால் 6 வீடுகள் சேதம் அடைந்தன. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பல பகுதி களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதால், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கன  மழை பெய்தது.  இதனால் மாவட்டத்தில் உள்ள  அனைத்து அணைகள், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த கன மழையால் அனைத்து ஆறு களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் குடியிருப்பு கள் மற்றும் சாலையில் வெள்ள நீர் ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்தனர். ஞாயிறன்று காலை 6  மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மைலாடியில் 72.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஒரே நாளில் 92.4 மி.மீ., மழை அளவு பதிவாகியது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 65.5 செ.மீ மழை பதிவாகியது. சராசரி மழை யளவு 25.2 மி.மீட்டர். மேலும் குமரி மாவட்டத்தில் 9 வீடு கள் சேதமடைந்தன. இதில் 6 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. 3 வீடுகள் மொத்தமாகவே இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்குப் பிறகு ஞாயிறன்று காலை முதல் மழை பெய்யவில்லை. வெயிலடிக்கத் தொடங்கியது. எனினும் மாலையில் மேகமூட்டம் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.