states

img

சத்தீஸ்கரில் சோகம் கிணற்றில் விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் பலி

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தின் சம்பா மாவட்டத்தின் கிகிர்டா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்த மரக்கட்டையை எடுக்க, கிணற்றுக்குள் ராம்சந்திர ஜெய்ஸ்வால் முதலில் இறங்கினார். அவர் நீண்ட நேரமாக வெளியே வராத நிலையில், ரமேஷ் படேல், ராஜேந்திர படேல், ஜிதேந்திரா படேல், திகேஷ்வர் சந்திரா ஆகிய 4 தொழிலாளர்களும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் சென்ற நிலையில், அவர்களும் வெளியே வரவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரி விக்க மாநில பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்திற்கு வந்தது. பாதுகாப்புக் கவசங்களுடன் பேரிடர் மீட்புப் படை, விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்களும் உயிரிழந்ததாக அறிவித்து, 5 உடல்க ளையும் மீட்டது. கிணற்றில் கிடந்த மரக்கட்டையை எடுக்கச் சென்று 5 தொழி லாளர்கள் உயிரிழந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.