தற்போது குற்றம் நடந்த நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வடலூர் காவல்நிலையத்திற்கு ஆய்வாளர் ராஜா பிப்ரவரி 2023இல் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து இங்கே பணியில் நீடிப்பது சட்டத்திற்கு விரோதமானது
சென்னை, மார்ச் 17- நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலை யத்தில் 2015ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன், காவலர்களால் சித்ரவதைக்கு உள்ளாக் கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர், உதவி ஆய் வாளர், காவலர் ஆகியோர் இதுவரை கைது செய்யவோ, பணியிடை நீக்கமோ செய்யப் படாமல் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தி லேயே பணி புரிவது சட்டத்திற்கு விரோதமா னது. எனவே, இவர்களை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வெள்ளியன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித விபரம்: கடலூர் மாவட்டம், பி.என்.பாளையம் கிரா மத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், விசா ரணைக்காக கடந்த 29.02.2015 அன்று நெய் வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு காவல் துறை ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர் களால் அழைத்துச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்து அடித்து கொல்லப்பட்டார். இந்த படு கொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங் களின் தொடர் போராட்டத்தின் விளைவாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என (இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 174) வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப் பட்டது.
7 ஆண்டு போராட்டமும் நீதிமன்ற உத்தரவும்
சிபிசிஐடி விசாரணையில் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவ லர் சௌமியன் மூன்று பேர் மீதும் U/S 218, 330, 343, 348, 304 (II) IPC என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட சிறப்பு எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை “கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன் கொடுமை வழக்காக” மாற்றிட வேண்டு மென வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் இப்பிரிவு களை இணைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பும் பெறப்பட்டது. இத்தீர்ப்பின்படி கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளை இணைத்து கடலூர் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது முறை யான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கு சுமார் 7 ஆண்டு காலம் நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மிரட்டலும் சாட்சியங்களை அழிக்க முயற்சியும்
இதன் பின்னரும் குற்றம் சுமத்தப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வா ளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகி யோர் இதுவரை கைதும் செய்யப்படாமல், ஒருநாள் கூட இடைநீக்கமும் செய்யப்படாமல் தொடர்ந்து காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது அதிகாரத்தை பயன் படுத்தி மறைந்த சுப்பிரமணியத்தின் மனைவி ரேவதிக்கு மிரட்டல் விடுப்பதும், உறவினர் கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பயன் படுத்தி இந்த வழக்கின் சாட்சியங்களை அழிப்ப தற்கும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
சட்டவிரோதம்...
இது மட்டுமின்றி மேற்படி குற்றம் சுமத் தப்பட்டவர்கள் தொடர்ந்து கடலூர் மாவட்டத் தின் காவல் நிலையங்களிலேயே பணியாற்றி வருகின்றனர். தற்போது குற்றம் நடந்த நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் ராஜா பிப்ரவரி 2023இல் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து இங்கே பணியில் நீடிப்பது சட்டத்திற்கு விரோதமானது மட்டுமின்றி, இவ் வழக்கை முடக்குவதற்கும், சாட்சிகளை கலைப்பதற்கும் தனது அதிகாரங்களை பயன்படுத்திட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந் தில்வேல், காவலர் சௌமியன் உள்ளிட்டோர் பணியில் நீடிப்பது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல, சட்டவிரோதமும் கூட. எனவே, குற்றம் சுமத்தப்பட்டுள்ள இவர் களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, கைது செய்திட உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதுவரை இவர்களை கடலூர் மாவட்டத்திற்கு வெளியில் பணி மாறு தல் செய்ய வேண்டுமென கோருகிறோம் என்று அந்த கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் கூறி யுள்ளார்.