இராஜபாளையம்,ஜன.3- கடந்த 35 மாதங்களுக்கும் மேலாக மூடப் பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளை ஒன்றிய அரசு இயக்கவில்லை என்றால் மாநில அரசே தலையிட்டு ஆலைகளை இயக்கி தொழிலாளர்களின் குடும்பங்களை பாது காக்க வேண்டும் என்று சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாநில நிர்வா கக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எம். சந்தி ரன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் எம்.அசோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு அரசாணைப்படி ரூ. 493-க்கு குறைவில்லாத கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் தேசிய பஞ்சாலைகள் கடந்த 35 மாதங்களுக்கும் மேலாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும். ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் ஆலைகளை இயக்காத பட்சத்தில்-மாநில அரசு ,ஒன்றிய அரசின் அனுமதி பெற்று ஆலைகளை இயக்கி தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டுறவு நூற்பாலைகள் சிறப்பாக இயங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதை வர வேற்கிறோம். கடந்த காலத்தில் மூடப்பட்ட ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் முதல்கட்டமாக தாரா புரத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலையை திறக்க பரிசீலனையில் உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கி றோம். தமிழக முதலமைச்சர் வழிகாட்டுத லின்படி கூட்டுறவு பஞ்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படவும், ஆலை மட்டத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டு பணப்பலன்கள் கிடைக்கச் செய்யவும் உடனடி நடவ டிக்கை தேவை. சில கூட்டுறவு பஞ்சாலைகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பத்தாண்டுகள் வரை தினக்கூலி தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.அவர்களுக்கு பஞ்சாலை நிர்வாகங்கள் நேரடியாக வங்கி மூலம் ஊதியம் வழங்கி வருகின்றன. வருங் கால வைப்புநிதி (PF ), ESI (தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம்) அமலில் உள்ளது. அத்தொழிலாளர்களை சட்டப்படி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக, இடைத்தர கர்களை (தொழிலாளர்கள் சப்ளை செய்யும் ஒப்பந்தக்காரர்களை) ஏற்படுத்தி, இனிமேல் தொழிலாளர்கள் தங்களது பணிக்கு ஒப்பந்தக்காரர்கள் மூலமாகத் தான் வரவேண்டும் என்பது ஏற்புடைய தல்ல. தொழிலாளர்களை ஏற்கனவே நடை முறையில் உள்ளபடியே பணிக்கு அனு மதிக்க வேண்டும். அவர்களுக்குரிய சட்டப் படியான உரிமைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற பஞ்சாலைத் தொழிலா ளர்களுக்கு சம்பளத்தில் பாதி குறைந்த பட்சம் ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.