states

img

பதிப்பாளர் செ.து.சஞ்சீவி இல்லையென்றால் தமிழ் ஒளி படைப்புகளை அறிந்திருக்க முடியாது

சென்னை, ஜூன் 14 - பதிப்பாளர் செ.து.சஞ்சீவி இல்லையென்றால், கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளை அறிந்திருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். பதிப்பாளர் செ.து.சஞ்சீவி படத்திறப்பு - புகழ்  வணக்க நிகழ்வு செவ்வா யன்று (ஜூன் 13) பாரி முனையில் நடைபெற்றது. ஒய்எம்சிஏ பட்டிமன்றம், கவிஞர் தமிழ்ஒளி நூற் றாண்டு விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்த நிகழ்வில் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், “தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசே கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி இரண்டு மாதங்க ளுக்கு முன்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு செ.து.சஞ்சீவி கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில், அரசு விழா கொண்டாடவும், சென்னை மேதின பூங்கா அருகே அவருக்கு சிலை அமைக்கவும், பல்கலைக் கழகம் ஒன்றில் கவிஞர் தமிழ் ஒளி பெயரில் ஒரு இருக்கை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார். அதனை பரிசீலிப்பதாக அமைச்சரும் கூறியிருக் கிறார். கடும் சிரமப்பட்டு கவிஞர்  தமிழ்ஒளியின் படைப்பு களை பதிப்பித்துள்ள செ.து.சஞ்சீவி ஆற்றிய பணி களை கொண்டு செல்லும் வகையில் இந்த விழாவை நடத்த கோரியிருக்கிறோம்” என்ற தகவலை பகிர்ந்து கொண்டார்.

“தற்காலத்திலும் தொடரும் சாதி ஆணவக் கொலைகளை பற்றி 1947 ஆம் ஆண்டே தனது ‘வீராயி’ காப்பியத்தில் பதிவு செய்தவர் தமிழ்ஒளி. அவருடன் 1955 ஆம் ஆண்டு  சஞ்சீவிக்கு நட்பு ஏற்படு கிறது. அதன்பின் அவரது படைப்புகளால் ஈர்க்கப் பட்டு, தேடித்தேடி சஞ்சீவி பதிப்பித்து வந்தார். தமிழ்ஒளி மீது கொண்ட அன்பினால் மட்டும் இதை அவர் செய்யவில்லை. பொதுவுடமை இயக்கத்தின் மீது சஞ்சீவிக்கு இருந்த பற்றும், மன உறுதியும்தான் காரணம். அத்தகைய சஞ்சீவி-யிடம், பொதுவுடமை இயக்கத்தில் ஏன் இணைந்து செயல்படக் கூடாது என்று கேட்க தவறிவிட்டேன். சஞ்சீவி மேற்கொண்ட பணியை மேலும் சிறப்பாக செய்வதற்கு எடுக்கும் முயற்சி தான் அவருக்கு செலுத்தும் அஞ்சலி” என்றும் அவர் கூறினார். பதிப்பாளர் செ.து.சஞ்சீவி-யின் இறுதி விருப் பப்படி இந்நிகழ்வில் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்பு களான, ‘கவிஞனின் காதல்’ நூலை  முனைவர் ப.தாமரைக்கண்ணன் வெளியிட, சஞ்சீவியின் மனைவி வசந்தா பெற்றுக்  கொண்டார். ‘புத்தர் பிறந் தார்’ நூலை ஜி.ராம கிருஷ்ணன் வெளியிட, புலவர் பு.சீ.கிருட்டிண மூர்த்தி பெற்றுக் கொண் டார். இந்நிகழ்வுக்கு சிகரம் ச.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். கவிஞர் கலி.பூங்குன்றன், பேரா.வீ.அரசு, ஓவியர் புகழேந்தி, கவிஞர் சைதை ஜெ, மயிலை பாலு,  நாடகவியலாளர் பிரளயன், உதயை வீரையன், கவிஞர்  இரா.தெ.முத்து உள்ளிட் டோர் பேசினர்.