வன்கொடுமைக்கு உள்ளான 2 பழங்குடியினப் பெண்களில், ஒருவர் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. அசாம் ரெஜிமெண்ட்டில் சுபேதாராக இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரூஸ். கார்க்கில் யுத்தத்திலும் பங்கேற்றவர். இவரது மனைவியைத்தான், கலவரக் கும்பல் கூட்டமாக வன்கொடு மைக்கு உள்ளாக்கியிருக்கிறது. கார்க்கிலில் நாட்டு படைகளோடு சண்டையிட்டவர், சொந்த நாட்டில் தனது மனைவி நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டதை எதிர்த்து சண்டையிட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் ஊடகமான https://nenow.in/ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கூறியதாக செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “கார்கில் யுத்தத்தில் தேசத்துக்காக போரிட்டேன். இலங்கையில் இந்திய அமைதிப் படையில் இணைந்து பணியாற்றி னேன். என்னுடைய நாட்டைப் பாதுகாக்க நான் யுத்தம் செய்தேன். ஆனால் என்னு டைய மனைவி மற்றும் கிராம மக்களை என்னால் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இந்த சம்பவத்தில் போலீசா ரும் தாக்குதல் நடத்தியவர்கள் பக்கமே நின்றனர். தாக்குதல் நடத்தியவர்களை தடுக்கவோ விரட்டியடிக்கவோ போலீஸ் முயற்சிக்கவில்லை” என கண்ணீர் விட்டுள்ளார்.