2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. பாஜக வெளியேற வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாகும். 2025- ஆம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தலை மையில் தேர்தல் நடை பெறும் என பீகார் மகா கூட்டணியின் சட்டப் பேரவை கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு.
பட்டியலின மற்றும் பழங் குடியின மாணவர்களுக் கான கல்வி உதவித் தொகைக்கு ஒன்றிய அரசு கூடுதலாக நிதி ஒது க்க வேண்டும் என மக்கள வையில் விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி யுள்ளார்.
டுவிட்டரின் அதிகாரப் பூர்வ டிக் கணக்குகளின் நிற மாற்றம் அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு நிற டிக் (மஞ்சள், ஊதா) செயல் பாட்டிற்கு வந்தது.
2019-21 ஆண்டுகளில் உபா (UAPA) எனும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4,890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 176 பேர் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளதாக நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அறிக்கை வெளியிட்டது.
சென்னை முத்தியால் பேட்டையில் ‘என்ஐஏ அதிகாரிகள் சோதனை’ எனக்கூறி வீட்டிலிருந்த ரூ.10 லட்சத்தை கொள் ளையடித்து சென்ற மர்ம கும்பல், அதே பகுதிக்கு அருகே உள்ள பர்மா பஜாரில் உள்ள செல் போன் கடையில் ரூ.20 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி யான நிலையில், கத்தார் உலகக்கோப்பை தொட ரால் கடந்த மாதம் முட்டை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்து 1.50 கோடி ஏற்றுமதி செய்யப் பட்டது. தற்போது மேலும் அதிகரித்து 2.20 கோடி முட்டைகள் ஏற்று மதி ஆகியுள்ளதாக ஏற்று மதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
“இந்திய ஒற்றுமை யாத்திரை”-யின் 100-வது நாளை (டிசம்பர் 16-ஆம் தேதி) முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களு டன் யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறி வித்துள்ளது. யாத்திரை யின் 100-வது நாள் ராஜஸ் தான் தலைநகர் ஜெய்ப் பூரில் நடைபெறுகிறது.
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் வரவிருக் கும் சில திருவிழாக்கள், பிற நிகழ்வுகளைக் கருத் தில் கொண்டு தலைநகர் லக்னோவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜன வரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என வும் மாநில அரசு அறிவிப்பு.
பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, அப்பொறுப்புக்கு தகுதி பெற்றதற்கான சான்றிதழை லூலா டி சில்வா பெற்றுக் கொண்டார். பிரேசில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அந்தச் சான்றிதழை அவரிடம் ஒப்படைத்திருக் கிறது. அவரோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்ட கெரால்டோ அல்க்மின், துணை ஜனாதிபதிக்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். தலைநகர் பிரேசிலியாவில் 300 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காபூலில் நடந்த திடீர்த் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. சீனர்கள் அதிகமாக பயன்படுத்தும் உணவுவிடுதி மீது நடந்த தாக்குதலில் சிலர் கொல் லப்பட்டனர். ஆயுதந்தாங்கிய மூவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு அழை த்துச் செல்லும் வழியிலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி யால் சுட்டவர்கள் பாதுகாப்புப் படையினரின் எதிர்த்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுப் படைகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போர் நடந்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட காங்கோ மக்கள் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு செல்லத் தொடங்கி யுள்ளார்கள். இதுவரையில் 4 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். மார்ச் மாதத்தில் இருந்து ஒரு லட்சம் மக்கள் உகாண்டாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள். ஒவ்வொரு வாரமும் ஆயிரக் கணக்கான மக்கள் உகாண்டாவுக்கு செல்கிறார்கள். அங்கு ஏற்கன வே ஒன்றரை லட்சம் காங்கோ மக்கள் அகதிகளாக உள்ளனர்.