states

குளம், ஏரிகளில் மீன்பிடி குத்தகை அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம்

சென்னை, ஜூன் 25- குளம், ஏரி உள்ளிட்டவைகளில் மீன்பிடி குத்தகை தொடர்பாக, தமிழ் நாடு அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த புதிய அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மேட்டுப்பாளை யம் மீனவர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்திருந்தது.  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, மீன்பிடி குத்தகை தொடர் பாக தமிழ்நாடு மீன்வளத்துறை கடந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பிறப்பித்த புதிய அரசாணையில்,பொது ஏலம் மூலமாக அதிகவிலை கோரு பவர்களுக்கு மட்டுமே மீன் பிடிப் பதற்கான குத்தகையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப் படி மீனவர்களுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் மீன்பிடிக் குத்தகையில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், பொது ஏலம் மூலமாக குத்த கையை நிர்ணயிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை சட்ட விரோதமானது என்ப தால், அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்ட பாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சண்முக சுந்தர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட் டனர்.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு புதிய அரசாணையைப் பிறப்பித்தது. கடந்த 1993 ஆம் ஆண்டு பிறப்பிக் கப்பட்ட அரசாணைக்கு, இந்த அர சாணை முற்றிலுமாக முரணாக உள்ள தால், 2022 ஆம் ஆண்டு பிறப்பிக்கப் பட்ட அரசாணை ரத்து செய்யப்படு கிறது. தமிழ்நாடு முழுவதும் மீன்பிடி குத்த கைக்கான ஏலம் விடும்போது, மீன வர்கள், பட்டியலினத்தவர்கள் உறுப்பி னர்களாக உள்ள கூட்டுறவு சங்கத்துக் குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யும் தொகைக் கேற்ப குத்தகை எடுக்க இந்த கூட்டுறவு சங்கங்கள் முன்வராத பட்சத்தில், உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  ஒருவேளை அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இருந்தாலோ அல்லது கூட்டுறவு சங்கமும், உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகமும் குத்தகை எடுக்க விரும்பினாலோ, பொது ஏலம் மூலம் குத்தகை விடப்பட வேண்டும். மேலும், மீன்களை அதிகம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தண்ணீரை மாசுபடுத்தக்கூடாது. அவ்வாறு தண்ணீரை மாசுபடுத்தி, அதை விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்கி நிலத்துக்கு தீங்கு ஏற்பட்டால், மீன்பிடிக் குத்தகையை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.