இந்தியாவில் 6,500-க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக ‘ஹெலன் அண்ட் பார்ட்னர்ஸ்’ என்ற அமைப்பு தகவல் தெரி வித்துள்ளது.
பச்சை நிறத்தில் இருக்கும் வாட்ஸ் அப் பிங்க் நிறமாக மாறுகிறது என்று கூறி லிங்க் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த பிங்க் நிற வாட்ஸ் அப் லிங்கை கிளிக் செய்தாலோ அல்லது பிங்க் நிற வாட்ஸ் அப்-பை டவுன்லோட் செய்தாலோ வங்கி மற் றும் இதர விஷயங்களில் மோசடி சம்பவங்கள் அரங் கேறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
12-ஆம் வகுப்பின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் 830 மாண வர்களின் மதிப்பெண் களில் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலை யில், தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களிலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள் ளன. நிலநடுக்கத்தால் இறந்த விபரங்கள் தொ டர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அர்மேனியா நாட்டின் எல்லை நகரமான யெராஸ்க்கில் அண்டை நாடான அஜர்பை ஜானைச் சேர்ந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி யதில் இரண்டு இந்தி யர்கள் காயமடைந்தனர். காயமடைந்த முகமது ஆசிப், மிர்ஹாசன் சஹா ஜன் இருவரும் யெரா ஸ்க்கில் உள்ள உலோக ஆலையில் கட்டுமானப் பணியில் வேலை செய் பவர்கள் என அர்மேனி யாவின் பாதுகாப்பு அமைச் சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூ ரின் பழமனேர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகமர்லா கிராஸ் என்ற இடத்தில் யானை கள் சாலையைக் கடந்த பொழுது 3 யானைக்குட்டி கள் பரிதாபமாக உயிரிழந்தன.
பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள நான்கு வழி பாலம் இடிந்து விழுந்ததற்கு மாநில அரசு மற்றும் ஒப்பந்ததாரரின் மெத்த னப் போக்கே காரணம் என பாட்னா உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக எடுக்க ப்பட்ட நடவடிக்கை அறி க்கையை சமர்ப்பிக்கு மாறு பீகார் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அரபிக்கடலில் உரு வான பிபோர்ஜாய் புயல் மணிக்கு 60-70 கிமீ வேக த்தில் குஜராத்தின் கட்ச் பகுதியில் வியாழனன்று மாலை கரையைக் கடக்க தொடங்கியது.
வாரத்தில் மற்ற நாட் களை விட திங்கள்கிழ மைதான் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது என அயர்லாந்தைச் சேர் ந்த “ராயல் காலேஜ் சர்ஜி யன்ஸ்” என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உலகச் செய்திகள்
நாட்டின் அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு போக்குவரத்து, நகர்ப்புற கட்டுமானம் மற்றும் சமூக மேம்பாட்டு வசதிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பணி களுக்கான பெரிய திட்டமொன்றை பிரேசில் அரசு உருவாக்கி யுள்ளது. இதை அறிவித்த அந்நாட்டு ஜனாதிபதி லூலா டி சில்வா, “இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கான ஏராளமான கொள்கைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றை மீண்டும் கொண்டு வரப்போகிறோம்” என்று தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு போக்குவரத்து, நகர்ப்புற கட்டுமானம் மற்றும் சமூக மேம்பாட்டு வசதிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பணி களுக்கான பெரிய திட்டமொன்றை பிரேசில் அரசு உருவாக்கி யுள்ளது. இதை அறிவித்த அந்நாட்டு ஜனாதிபதி லூலா டி சில்வா, “இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கான ஏராளமான கொள்கைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றை மீண்டும் கொண்டு வரப்போகிறோம்” என்று தெரிவித்தார்.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாட்டில் 130 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள். 17 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த மாநாட்டின் முழக்கமாக “நியாயமான உலகத்திற்கு இறையாண்மையுடனான வளர்ச்சியே அடிப்படை யாகும்” என்று வைத்திருக்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் மத்தியில் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் உரையாற்றவுள்ளார்.