states

முன்னாள் டிஜிபி மேல்முறையீடு: ஜூலை 19 இல் விசாரணை

விழுப்புரம், ஜூலை 11- பாலியல் புகாரில் வழங்கப்படும் தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஜூலை 19ஆம் தேதி விசாரணை செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் அப்போ தைய முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்.பி.க்கு  பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்  தாஸ் மீதும், புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் சிபிசிஐடி காவல்துறை வழக்குப் பதிந்த னர். இதுதொடர்பான வழக்கில்  விழுப்புரம் தலைமைக் குற்றவியல்  நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  கடந்த  மாதம் 16 ஆம் தேதி ராஜேஷ்  தாஸூக்கு இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் எஸ்.பி. கண்ணன் சார்பில் அவரது  வழக்கறிஞர் ஹேமராஜன் கடந்த ஜூன் 22 ஆம் தேதி மேல்முறையீடு செய்தார். அதே போன்று, தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்  தாஸ் சார்பில், அவரது வழக்கறிஞர்  ரவீந்திரன் ஜூலை 5 ஆம் தேதி மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த மனுக்கள்  மீதான விசாரணை செவ்வாய்க் கிழமை வந்த நிலையில், ஜூலை 19-ஆம் தேதி விசாரணை நடை பெறும் என்று முதன்மை மாவட்ட நீதி பதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.