states

குடியரசுத் தலைவர் ஜூன் 15 சென்னை வருகிறார்

சென்னை, மே 30- சென்னை கிண்டியில் அமைக்கப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனை யைஜூன் 15 ஆம் தேதி குடியரசுத்  தலைவர் திரவுபதி முர்மு திறக்க வுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. கிண்டியிலுள்ள கிங்ஸ் ஆய்வக  நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி யில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய  பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை அமைப்பதற்கான பணிக ளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி னார். இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்ட டங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டடமான ‘ஏ’ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டடம் அமைக் கப்பட்டுள்ளன. அதேபோன்று ‘பி’ பிளாக் ரூ.78 கோடியில் 18,725 சதுர  மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம்,  தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டட மான ‘சி’ பிளாக் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலை யில் ஜூன் 5 ஆம் தேதி அந்த மருத்துவ மனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக  இருந்தது. இதற்கான அழைப்பிதழ்க ளும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிறகு,  ஜூன் 15ஆம் தேதி கிண்டி மருத்துவ மனையை திறந்துவைக்க சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திறப்பு விழா தேதி குறித்து  அதிகாரப்பூர்வ தகவலை ஓரிரு  நாள்களில் தமிழ்நாடு அரசு வெளி யிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.