சென்னை, ஜூன் 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் அரியலூர் மாவட்ட தலை வர்களில் ஒருவரான தோழர் கே. மகாராஜன் மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் கே. மகாராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக ஜூன் 8 அன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை யடைந்தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் மகாராஜன் ஜெயங் கொண்டம் பகுதியில் கட்சியை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங் காற்றியவர். ஆண்டிமடம், அழகா புரம் தலித் மக்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டத்தையும், மகி மைபுரம் பழங்குடி மக்களுடைய நிலத்தை மீட்பதற்கான போராட்டத் தையும் முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர். ஒடுக்கப்பட்ட உழைப் பாளி மக்களின் முன்னேற்றத்திற்கா கவும், விவசாயிகளின் நலன்களுக் காகவும் பல்வேறு போராட்டங் களை முன்னெடுத்தவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டச் செயலாளராகவும், நிர்வாகியாக வும் நீண்ட காலம் செயல்பட்டவர். தற்போது வரை கட்சியின் அரிய லூர் மாவட்ட செயற்குழு உறுப்பின ராக செயல்பட்டு வந்தவர். அவரு டைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்திற்கும் ஏற்பட்ட பேரி ழப்பாகும். அவரது மறைவால் துயருற் றுள்ள அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதா பத்தையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.