சண்டிகர் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் சர்க்கி தாத்ரி பகுதியில் ஆகஸ்ட் 27 அன்று மாட்டிறைச்சி உண்டதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞரும், புலம்பெயர் தொழி லாளியான சபீராவை (26) ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் அடித்துக் கொன்றனர். இந்த படுகொலை தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். “சபீராவின் படுகொலை துர திர்ஷ்டவசமானது தான். எனினும் பசு பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை” என ஹரியானாவின் பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி அப்போது ஆணவத்துடன் கூறியது கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியது. இந்நிலையில், “இந்துத்துவா குண்டர்களால் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம் இளைஞர் சபீரா வீட் டில் இருந்தது மாட்டிறைச்சி அல்ல” என சார்க்கி தாத்ரி மாவட்ட டிஎஸ்பி பாரத் பூஷன் தடவியல் விசாரணை யை சுட்டிகாட்டி அறிக்கை வெளி யிட்டுள்ளார். இதுகுறித்து டிஎஸ்பி பாரத் பூஷன் மேலும் கூறுகையில், “பசு காவலர் எனப்படும் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட மேற்கு வங் கத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் சபீரா, குப்பை உள்ளிட்ட இரும்புக் கழிவுகளை சேகரிக்கும் தொழிலைச் செய்து வந்தவர். அவர் தனது வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை. மேலும் சபீராவின் வீட்டில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் மாட்டி றைச்சி இருந்ததற்கான எந்த தட வியல் எதுவும் இல்லை. அதனால் சபீரா வேண்டுமென்றே அடித்துக் கொல்லப்பட்டுள்ளது நிரூபணமாகி யுள்ளது” என அவர் கூறியுள்ளார். ஹரியானா போலீசாரின் அறிக் கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள் ளன.