சென்னை, அக். 13 - டன்னுக்கு 20 ரூபாய் கூலி உயர்வு கேட்டு வெள்ளியன்று (அக.13) தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக தலை மையகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி யாற்றும் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படும். அதன்படி கடந்த 8 மாதங்களாக கூலி உயர்வு அறிவிக்காமல் நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இந்நிலையில் டன்னுக்கு 20 ரூபாய் கூலி உயர்வு வழங்க வேண்டும், மண்டல மாறுதலில் வெளிப்படைத் தன்மையை கடை பிடிக்க வேண்டும், விழிப்பு பணிக் குழுவின் அத்துமீறலை தடுப்ப தோடு, தகுதியான பணியாளர் களை தேர்வு செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை தொகை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர் களிடம் பேசிய சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழகம் 1456 ரேசன் கடைகளை நடத்துகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகளில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணியாற்றும் நிலை உள்ளது.
எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, பிற துறை அதிகாரி களை நியமிப்பதை கைவிட வேண்டும். இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பருவகால ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருச்சியில் இன்டேன் கேஸ் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும். கிடங்குகளில் பணி யாற்றும் துப்புரவு பணியாளர் களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செய லாளர் ஆர்.புவனேஸ்வரன், பொருளாளர் எம்.ஏழுமலை, துணைத் தலைவர் கே.சுப்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ஆர்.மோகன் உள்ளிட்டோர் பேசினர்.