states

கிராம உதவியாளர் - நியாயவிலை கடை பணியாளர்கள் தேர்வு

சென்னை,அக்.27- கிராம உதவியாளர் (தலையாரி) மற்றும் நியாய விலைக் கடை பணியாளர்கள் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக் கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்  தலைவர் டி.வில்சன், மாநில பொதுச்  செயலாளர் பி.ஜான்சிராணி ஆகி யோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- மாற்றுத்திறனாளிகளில் பலர்  படித்தவர்களாக, பட்டம் பெற்ற வர்களாக வேலை வாய்ப்புக்காக ஏங்கி தவிக்கும் பரிதாப நிலையில் உள்ளனர். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 2016 ஆம் புதிய உரிமைகள் சட்டத்தின்படி அரசு துறையில் 4  விழுக்காடு வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதை தமிழக அரசு  நிறைவேற்ற முயற்சி எடுத்திருப் பதை வரவேற்கிறோம்.

அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள கிராம  உதவியாளர் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் பணிக்கான  அறிவிப்புகளில் மாற்றுத்திறனாளி கள் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மாவட்ட அளவில் குறைந்த எண்ணிக்கையில்தானே என உதிரிகளாக வேலைவாய்ப்பு களை கணக்கீட்டு மாற்றுத்திறனாளி களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப்படும் சூழல் நிலவு கிறது. ஆகவே, தமிழகம் முழுவதும்  இப்பணிகளின் மொத்த எண்ணிக் கையை கணக்கில் கொண்டு 4  விழுக்காடு பணிகள் மாற்றுத்திற னாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுகிறோம். சமூகநீதி, சமநீதி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு அனைத்து துறைகளி லும் அறிவிக்கப்படும் பணி  வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிக ளுக்கு 4 விழுக்காடு பணிகளை உறுதிப்படுத்த தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான சிக்கல்களையும் தவிர்த்து மாற்றுத்திறனாளிகள் எளிமையான முறையில் விண்ணப்பிக்க உரிய  ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க  வேண்டும். இவ்வாறு  தெரிவித்துள்ளனர்.