சென்னை, மார்ச் 9- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 50 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகி யோர் முதலமைச்சருக்கு அனுப்பி யிருக்கும் கடிதத்தின் விவரம் வருமாறு:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருபவர்கள். இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 100 நாட்கள் வேலையும் முழு ஊதியமும் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களைத் தவிர மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் இதனை நடைமுறைப்படுத்துவதில் உதாசீனப்போக்கு காணப்படுகிறது. சில மாவட்டங்களில் இவர்க ளுக்கு முழு ஊதியம் வழங்கினா லும் 100 நாட்கள் வேலை வழங்கப் படுவதில்லை. மாறாக, மிகக் குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுகிறது. குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் ஒரு நாள் கூட வேலை வழங்காத ஊராட்சிமன்றங்களும் உள்ளன. ஊராட்சிமன்றத் தலைவர், செயலா ளரே தங்களை அதிகாரிகளாக பாவித்துக்கொண்டு இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதோடு ஏளன மாக வசைபாடும் நிலையும் உள்ளது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டம்.
எனவே, இத்திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக 100 நாட்கள் வேலைவழங்க தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தி அப்பகுதியில் வாழும் ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கும் இதில் வேலை வழங்க வேண்டும். மேலும், சமீபத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதை வரவேற்கி றோம். அதுபோன்று, இத்திட்டத் தின் கீழ் வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள்.