states

தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை

சென்னை,ஏப்.18- மாற்றுத்திறனாளிகளின் சேவை யில் ஈடுபட்டுள்ள அரசு நிதி உதவி  பெறும் 92 ஆரம்பநிலை பயிற்சி மையங் கள் மற்றும் 56 மறுவாழ்வு இல்லங்கள், அறிவுசார் மாற்றுத்திறனாளிக்கான 70 பராமரிப்பு இல்லங்களில் பணி புரியும் 1,011 பணியாளர்களுக்கு வழங் கப்பட்டு வரும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலுரை  வழங்கினார். பின்னர் புதிய அறிவிப்பு களை அவர் வெளியிட்டார்.  உயர்கல்வி பயிலும் ஆயிரம்  பார்வை மாற்றுத்திறன் மாணவர்க ளுக்கு தலா ரூ.14 ஆயிரத்தில் நவீன  வாசிக்கும் கருவி வழங்கும் திட்டம்  செயல்படுத்தப்படும். ஒரு கால் பாதிப்  படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்  விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளி களுக்கு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால்  ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, பயனாளி யின் பங்கு தொகையை செலுத்துவ தற்காக வட்டியில்லா வங்கி கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆயிரம் பேர் பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும்.   தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலமாக வழங்கப் பட்டு வரும் விபத்து, நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையை உயர்த்தி கூடுதலாக ரூ.2  கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத் தப்படும். மாற்றுத்திறனாளிகளின் சேவை யில் ஈடுபட்டுள்ள அரசு நிதி உதவி  பெறும் 92 ஆரம்பநிலை பயிற்சி  மையங்கள் மற்றும் 56 மறுவாழ்வு இல்லங்கள், அறிவுசார் மாற்றுத் திறனாளிக்கான 70 பராமரிப்பு இல்லங்க ளில் பணிபுரியும் 1,011 பணியாளர்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதி யம் உயர்த்தி வழங்கப்படும்.  அதன்படி சமூக பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும்; துணை செவிலிய ருக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.10 ஆயிர மாகவும்; தொழிற்பயிற்றுனர் மற்றும்  விடுதி காப்பாளருக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும்; இரவு காவலருக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து  ரூ.8 ஆயிரமாகவும்; உதவி சமையல ருக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும்; துப்புரவு பணியாளர் களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5  ஆயிரமாகவும்; பராமரிப்பு உதவி யாளர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

பின்னடைவு பணியிடம்

அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் படும் 326 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளை பரா மரிக்க எதுவாக மாதந்தோறும் ரூ.4,500 மதிப்பூதியத்தில் பராமரிப்பு  உதவியாளர்களை நியமனம் செய் யும் திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில், தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து தங்கி உள்ள 592 மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், மானியம் ரூ.42-லிருந்து  ரூ.100 ஆக உயர்த்தப்படும்.  மாற்றுத் திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகளில்  உள்ள பின்னடைவு காலிப்பணியிடங் களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணி இடங்களை நிர்ணயம் செய்து, சிறப்பு  ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு, பணி வாய்ப்புகள் வழங்கப்படும். இரண்டு  ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதி யத்தின் கீழ் பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளிகளும் சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளின் விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளை தளர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதிய உணவு விரிவாக்கம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை 2 மடங்காக உயர்த்தி 22 ஆயிரத்து 300 மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரசு நிதி உதவி யுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங் களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்க ளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தை களுக்கு இணை உணவு மற்றும் மதிய  உணவு வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.