states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு, தேவஸ்தானம் மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கண்டிப்புடன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனி மாநில அந்தஸ்து வழங்க முடியும்? இது போன்ற மனுக்களை எப்படி விசாரிக்க முடியும்? என்று உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது சட்டப்பிரிவை இனி எந்த காலத்திலும் மீண்டும் கொண்டு வர முடியாது” என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிராம பாது காவலர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

“நாங்கள் பின்பற்றும் இந்துத்துவா ஜோதிராவ் பூலே, ஷாகு, அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தத்துக்கு முரணானது அல்ல” என மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

ஒன்றிய அரசின் அலட்சியத்தைக் கண்டித்து  பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் ஓய்வூதியதாரர் களின் கூட்டு மன்றம் செவ்வாய்க்கிழமை (நவ.12) தில்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தவுள்ளது.

ஒரு குடும்பத்தில் இரட்டை குழந்தைகள் ஒரு  ஜோடி இருந்தாலே அடையாளம் காணமுடி யாமல் தவிக்கும் நிலை உள்ள சூழலில், பஞ்சாப் மாநி லத்தில் ஜலந்தர் மாவட்டத்தின் போலீஸ் டிஏவி பப்ளிக்  பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வரு வதாக ஒரு அதிசயமான செய்தி வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி (அஜித்) தலைவருமான பாபா சித்திக் கொலை  வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\

தில்லியில் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதாக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, ஒன்றிய அரசு வைக் கோல் எரிப்பதற்கான அபராதத்தை இரட்டிப்பாக்கி யுள்ளது.