சென்னை, ஜூன் 5- தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலை யில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி திறப்பு தேதியை மீண்டும் தள்ளி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் கல்வியாண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்பு களும் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் முன்னேற்பாடு கள் மேற்கொண்டு வந்தன. ஆனால் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளிகளை திறப்பதை மேலும் தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. குறைந்தது தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்களும், பொதுமக்களும் வலி யுறுத்தி வந்தனர். அந்த வகையில், திங்களன்று (ஜூன் 5) பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைத்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கலாமா? என்பது குறித்து தலைமைச் செய லகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக் குப் பிறகு பள்ளி கல்வித் துறை அமைச் சர் அன்பில்மகேஸ் தெரிவித்துள்ளார்.