சென்னை, நவ.14- அரசு பொதுத் தேர்வுக்கான அட்ட வணை அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட தேர்வுகளுடன் குறுக் கிடாத வகையில் பொதுத்தேர்வுக்கு மூன்று வகையான அட்டவணை தயா ராக உள்ளது. முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். மழை முன் னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமை களில் பள்ளிகள் செயல்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து, 7 ஆயிரத்து, 225 மாணவர் களுக்கு நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத, 46ஆயிரத்து 216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு, 29ஆயிரத்து279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31ஆயிரத்து730 மாணவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.