states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தில்லியில் நடைபெற்ற  ஜி-20 மாநாடு தொடர் பான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும், அரசியல் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், இந்தியில் மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு  வேலைக்காக காத்திருப்ப வர்கள் எண்ணிக்கை 67.23 லட்சமாக உயர்ந்  துள்ளது. அதிகப்பட்ச மாக பெண்கள் 35.82  லட்சம் பேரும், ஆண்கள்  31.40 லட்சம் பேரும், 268 மூன்றாம் பாலினத்த வரும் அரசு வேலைக்காக காத்திருகிறார்கள்.

“இந்தியா ஒரு மதச்சார் பற்ற நாடு; இங்கு யாரும் யாரையும் மதம் சார்ந்து  நிர்ப்பந்திக்க முடியாது” என ஸ்ரீ ஸ்ரீ அன்குல்சந்திர சக்கரவர்த்தி என்பவரை பரமாத்மாவாக அறி விக்கக் கோரி தொடர்ந்து மனுவை ரூ.10,000 அப ராதத்துடன் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

குஜராத் சட்டப்பேரவை 2-ஆம் கட்ட தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகின.

எல்லை பிரச்சனைக்கு இடையே செவ்வாயன்று மகாராஷ்டிரா அமைச் சர்கள் சந்திரகாந்த் பாட் டீல், ஷம்புராஜ் தேசாய் கர்நாடக மாநிலம் பெல காவிக்கு வருகை தர உள்ள நிலையில், அமைச்சர்கள் வருகையை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

கியூபா-கரீபிய சமூகத்தின் எட்டாவது உச்சி மாநாடு பார்படாசில் டிசம்பர் 6 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. இதில் கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டயஸ்-கானெல் பங்கேற்கவிருக்கிறார். இதையொட்டி கரீபியப் பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார். செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பார்படாஸ் மற்றும் கிரெனடா ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் தலைவர்களோடு இருதரப்பு உறவுகள் பற்றிப் பேசுகிறார்.

அரசின் கொள்கைகள் மற்றும் எரிபொருள் விலைகள் ஆகியவற்றிற்கு எதிராக ஜெர்மனி விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல நகரங்களின் சாலைகளில் டிராக்டர்கள் அணிவகுப்பை நடத்தியிருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஐரோப்பிய மக்களை நெருக்கடியில் சிக்க வைத்துள்ள உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

அல்ஜீரியாவும் ஜோர்டானும் ஐந்து உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன. அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்தெல்மஜீத்தும், அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த உடன்பாடுகளில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இருதரப்பு அரசியல் ஆலோசனைகள், இருதரப்பு விசா, அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த உடன்பாடுகளில் இடம் பெற்றிருக்கின்றன.

“தில்லியில் ‘ஜி-20’ மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு எதுவும் கிடையாது. இது ‘ஜி-20’ மாநாட்டுக்கான சந்திப்பு மட்டுமே ஆகும். நமது தேசிய மலராக தாமரை உள்ளது என்றபோதிலும், அது அரசியல் கட்சி ஒன்றின் சின்னமும் ஆகும். அதனால், ‘ஜி-20’ மாநாட்டுக்கான சின்ன மாக தாமரை மலர் பயன்படுத்தப்பட கூடாது” என்று திரிணா முல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“அரசியல் லாபங்களுக்காக மக்களிடையே வெறுப்பு ணர்வு விதைக்கப்பட்டு தேசத்தின் உயிர்நாடி சிதைக் கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். ‘கேசிஆர், உங்கள் அரசை கவிழ்ப்போம்’ என பிரதமர் மோடி பகிரங்கமாக மிரட்டுகிறார். ஆனால், மோடியின் அரசைப் போல் எங்களுடைய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசை கவிழ்ப்பதற்கான காரணத்தை மோடி சொல்ல வேண்டும். ஒரு கட்சி ஆட்சி யில் இருப்பதும், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதும் மக்கள்  கையில் உள்ளது.  ஆனால், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினால் மாநில அரசை அகற்றுவோம் என அவர் மிரட்டுகிறார்” என தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.