கோயம்புத்தூர், மார்ச் 5- அரசு மற்றும் மக்களின் நலனைக் கருதி, வேலைவாய்ப்புகளை அள் ளித்தரும் சிறு, குறு தொழில் முனை வோர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என கோவையில் நடைபெற்ற தொழில் பாதுகாப்பு மாநாடு வலியுறுத்தி உள்ளது. கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு கோவை, சுகுணா ஆடிட்டோரி யத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், எம்எஸ் எம்இ அசோசியேசன் நிர்வாகி தெய் வேந்திரன் வரவேற்றார். மாநாட்டில், தமிழ்நாடு சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கேரளா தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் ஆகியோர் உரையாற்றினர். இம்மாநாட்டில், கோவை சிறு மற்றும் குறு பவுண்டரி அதிபர்கள் சங்க தலைவர் ஏ.சிவசண் முக குமார், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் தலைவர் ஜி. அருள்மொழி, தமிழ்நாடு சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
கே.கிருஷ்ண சாமி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்க ளின் கூட்டமைப்பின் மாநிலச் செய லாளர் இரா.வேலுச்சாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தி யாளர்கள் அசோசியேசன் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க (டாக்ட்) தலை வர் ஜே.ஜேம்ஸ், தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்க செயலாளர் பிர தீப் சுகுமார், கோயமுத்தூர் கம்ப்ரசர் இண்டஸ்ட்ரி அசோசியேசன் தலை வர் எம்.ரவீந்திரன் ஆகியோர் தொழில் சார்ந்த பிரச்சனைகளை பேசினர். இதைத்தொடர்ந்து, தென்னிந் திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க உப தலைவர் மா.செந்தில் குமார், தி சௌத் இண்டியா ஸ்பின் னர்ஸ் அசோசியேசன் செயலாளர் எஸ்.ஜெகதீஷ் சந்திரன், தேசிய தென்னை நார் கூட்டமைப்பின் தலை வர் எஸ்.கே.கெளதமன், இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கே.இ.ரகுநாதன் ஆகியோ ரும் சிறு குறு தொழில்களில் ஏற் படும் பிரச்சனைகளை எடுத்துரைத்த னர். முடிவில், இந்திய தொழிற்சங்க மையத்தன் மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், நிறைவுரையாற்றி னார். கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் செயலாளர் கே. பாண்டியன் நன்றி கூறினார்.