உதகையில் மீண்டும் உறைபனி தொடக்கம்
உதகை,டிச.25- உதகையில் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உறைபனிப் பொழிவு தொடங்கி, கடும் குளிரான காலநிலை நிலவுகிறது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவும். காலநிலை மாறுபாட்டால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கின. அந்த வரிசையில், பனிக் காலமும் தாமதமாக தொடங்கியது. கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நீர் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. நவ.22 ஆம் தேதி உதகையில் உறைபனிப் பொழிவு தொடங்கிய ஒரு வாரத்துக்குள், வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்தது. அதன் பின்னர் புயல் தாக்கம் காரணமாக உறைபனி முற்றிலும் நின்று விட்டது. இந்நிலையில், ஒரு மாதம் கழித்து தற்போது உறைபனியின் தாக்கம் தொடங்கியுள்ளது. அதன்படி, உதகை தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டிக் கிடந்தது. உதகையில் காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவு கிறது. இரவு முதல் அதிகாலை வரை பனி அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடும் குளிரில் இருந்து தப்பிக்க, பொது மக்கள் அதிகளவில் கம்பளி ஆடை களை அணிகின்றனர். சிலர் ஆங் காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர். இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாலசுந்தரம் கூறும்போது, ‘‘உதகையில் குறைந் தபட்சமாக 7 டிகிரி செல்சியஸூம், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸூம் வெப்பநிலை பதிவானது. அடுத்த ஒரு சில வாரங்களில் மைனஸ் டிகிரியை வெப்பநிலை எட்டலாம். அதே நேரம், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 71 விழுக் காடாக இருந்தது” என்றார்.
தருமபுரிக்கு ரூ.7564.68 கோடி நபார்டு வங்கி கடன்
தருமபுரி, டிச.25- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டார். பிறகு, ஆட்சியர் கூறியதாவது:- வளம் சார்ந்த கடன் திட்டம் விவசா யத்தில் நீண்டகால கடன் வழங்குவ தற்கான சாத்தியக் கூறுகளை விளக்கு வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழி லாக மாற்றிட இத்திட்டம் உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக் கல் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்து தல், கால்நடை வளர்ப்பை விவசாயத் தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயி களின் வருமானத்தை பெருக்க உதவிடும் வகையில் வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு உறுதுணை யாக இருக்க வேண்டும். தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.7564.68 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோயம்பேட்டில் 500 டன் காய்கறி மூட்டைகள் தேக்கம்
சென்னை,டிச.25- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி 60 லாரிகள் உட்பட 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.24) இரவு தொடங்கிய மழை ஞாயி றன்று(டிச.25) காலை 10 மணி வரைக்கும் பரவலாக நீடித்தது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. காய்கறி விற்பனை மந்தம் காரண மாக சுமார் 500 டன் காய்கறிகள் மூட்டைகள் விற்பனையாகமால் குவிந்து கிடந்தது. குறிப்பாக தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி, சவ்சவ் உள்ளிட்டவை அதிகம் தேங்கி யது. இதனால் மொத்த வியாபாரிகளை பெரிதும் கவலையடையந்தனர்.
பொங்கல் தொகுப்பில் கரும்பு - தேங்காய்: சிபிஐ கோரிக்கை
சென்னை,டிச.25- பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய் சேர்த்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோவும், ரூ.1000 ரொக் கப் பணமும் நியாய விலைக்கடை கள் மூலம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில், கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு, நெய் உட்பட 21 பொருட் கள் கொண்ட பரிசுத் தொகுப்பில் இருந்ததால் இந்த ஆண்டு ஏமாற்ற மளிக்கிறது. பொங்கலுக்கு பயன்படுத்தப் படும் அச்சு வெல்லம் எதிர்பார்க்கும் நிலையில் “சர்க்கரை” என்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பொங்கல் விழாவை எதிர்நோக்கி செங்கரும்பு விளைவித்த விவசாயிகளும், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் “தேங்காயும்“ இடம் பெற வேண்டும் என தென்னை விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். இவர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் மறுபரி சீலனை செய்து வழங்குவார் என்ற பெரும் நம்பிக்கையோடு காத்திருக் கிறார்கள். ஆகவே, ரொக்கப் பணத்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருள்களுடன், கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.
ஜன.27-ல் பழனி கோவிலில் கும்பாபிஷேகம்
பழனி, டிச.25- பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை யொட்டி, யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்குவதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்ர பாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழனி கோயிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையையும் இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத் தார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச் சர் சேகர்பாபு, ‘‘பழனி தண்டாயுதபாணி கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பி லான வரைவுத் திட்டத்திற்கு முதலமைச்சர் ஒப்பு தல் அளித்துள்ளதாக’’ தெரிவித்தார்.
போதைப்பொருள் விற்பனையால் குற்றங்கள் அதிகரிப்பு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை, டிச.25- போதை பொருள்கள் விற்பனையால் தமிழ கத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனி சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இருந்து வெளிமாநி லங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கஞ்சா கடத்தப்படுவதாகவும், கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப் படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
சென்னை, டிச.25- இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை யையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளி ரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந் தது. பிரார்த்தனைக்கு வந்தவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த வர்கள் வரவேற்றனர். பிரார்த்தனை யில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிந்ததை தொடர்ந்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரி வித்து கொண்டனர். தங்களது நண் பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு, கேக் வழங்கி மகிழ்ந்தனர். சென்னையில் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவால யம், சாந்தோம் தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயம், லஸ் பிர காச மாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், அண்ணாசாலை மேம்பாலத்தில் உள்ள கதீட்ரல் தேவா லயம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு ‘சாணி பெயிண்ட்
ராய்ப்பூர், டிச.25- சத்தீஸ்கரில் பழங்குடியின குழந்தைகளுக்கான அரசு பள்ளி மற்றும் விடுதிக்கு சாணம் பூசப்பட்டு வருகிறது. ‘கோதனா நியாய யோஜனா’ திட்டத்தின் கீழ் கன்கர் மாவட்டத்தில் உள்ள கோடகானில் உள்ள எஸ்யுஎம் பள்ளி மற்றும் விடுதிக்கு ‘சாணி பெயின்ட்’ வழங்கப்படுகிறது. சாணியில் இருந்து மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பெயிண்ட் பயன்படுத்தப்படுகிறது.