உலக மக்கள் தொகையில் 0.001% பேர் மட்டுமே மாசற்ற நல்ல காற்றை சுவாசிக்கின்றனர். மேலும் உலகில் 1% நிலப் பரப்பு மட்டுமே காற்று மாசுபாடு இல்லாத பாது காப்பு வரம்புக்குள் உள்ள தாக சர்வதேச மாசுபாடு திட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் தில்லியில் பெண்களுக்கு எதிராக நாளுக்குநாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், 68 வயதுமிக்க பெண் மற்றும் அவரது 5 வயது பேத்தி யை கத்தி முனையில் மிரட்டி ரூ.3 கோடி மதிப் புள்ள வைர, தங்க நகை களைக் கொள்ளை யடித்தது மத்தியப்பிர தேசத்தைச் சேர்ந்த கும்பல். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப் பட்டனர்.
ஹோலி பண்டிகை, சர்வ தேச மகளிர் தினம் கொண் டாட கட்டுப்பாடு என்ற பெயரில் விடுதிக்குள் அடைத்து வைத்ததாக மாணவ - மாணவிகள் தில்லி பல்கலைக்கழக விடுதி நிர்வாகம் மீது குற்றச்சாட்டியுள்ளனர்.
ஆளும் பாஜக அரசின் ஊழலைக் கண்டித்தும், முதல்வர் பதவி விலகக் கோரியும் வியாழனன்று கர்நாடகாவில் 2 மணி நேர பந்த் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த நிலை யில், பள்ளி, கல்லூரித் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பந்த்தை திரும்பப் பெற்றுள்ளது.
திஹார் சிறையில் உள்ள தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருக்கு தனி வார்டு ஒதுக்கப் பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தகவல் தெரி வித்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கல்லூரி மைதானத்தில் நடந்த கபடி போட்டியின் போது மருந்தக பிரிவு முதலாம் ஆண்டு (18 வயது) மாண வர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக உலகில் அதிக அடக்குமுறை கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் நாடு மாறி யுள்ளது என சர்வதேச மகளிர் தினத்தன்று வெளி யிட்ட அறிக்கையில் ஐநா சபை குறிப்பிட்டுள்ளது.
தெற்கு சூடான் நாட்டிற்கு பரபட்சமில்லாத ஆதரவு மற்றும் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கிய இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தெற்கு சூடானின் நிரந்தரப் பிரதிநிதி அகுய் போனா மல்வால் ஐநா சபையில் உரையாற்றினார்.
நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டவர் நடிகர் விஜயகாந்த். அந்த இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவதுதான் சரியான அங்கீகார மாக இருக்கும். நிச்சயம் பாராட்டு விழா நடத்து வோம் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
சமூக அமைதியை குலைக்கும் விதத்தில் பேசிய பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் 5 மாதம் (163 நாட்கள்) சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீனாவின் மங்கோலிய எல்லை பகுதியில் உள்ள அல்க்சா லெப்ட் திறந்தவெளி நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய 53 பேர் பலியாகியதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகச் செய்திகள்
ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பயணம் மேற்கொண்டுள்ளார். கபோன் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய இரண்டு நாடுகளும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பிரான்சின் படைகள் இருப்பதற்குப் பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது பயணத்தைப் பல நாடுகளும் உற்று நோக்கிப் பார்த்தன என்று அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.'
வரும் மாதங்களில் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் அதிகரிக்கப் போகிறது. அந்நாட்டின் எரிபொருள் துறை நடவடிக்கைகளைக் காட்டி அமெரிக்கா ஏராளமான தடைகளைத் தாண்டி இதை சாதிக்கப் போகிறது என்று ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்திலேயே கணிசமான அதிகரிப்பை ஈரான் அடைந்துள்ளதால் நடப்பாண்டில் ஏற்றுமதி பெரும் அளவில் இருக்கப் போகிறது என்று அரசு எதிர்பார்க்கிறது.
ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சின் கடன் ஜனவரி 2023இன் நிறைவில் 24 ஆயிரத்து 889 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் அந்நியக் கடன்களை வாங்கிக் குவித்ததே இதற்குப் பெரிய காரணம் என்று சொல்லப்படுகிறநது. மொத்த கடனில் 31.5 விழுக்காடு வெளிநாடுகளில் வாங்கிய கடன் என்றும், 68.5 விழுக்காடு கடன் உள்நாட்டில் வாங்கியது என்றும் அந்நாட்டின் அரசு அதிகாரப்பூர்வ மாக வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.