states

img

21 ஆண்டுக்குப் பிறகு வேதாரண்யத்தில் சரக்கு ரயில்

வேதாரண்யம், நவ.5 - 21 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி யில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்து துவங்கப் பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி -  அகஸ்தியன்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை யாக மாற்றப்பட்டு, கடந்த  ஏப்ரல் மாதம் முதல் பய ணிகள் சேவை துவங்கியது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட சரக்கு போக்குவரத்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறன்று நெல் ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது. 21 பெட்டிகளில் 25,000 மூட்டைகள் நெல் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் உப்பு ஏற்றுமதி தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.