சென்னை, அக்.1- இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம் நிறைவு பெற்றதால் இனிமேல் தனி யார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்திதான் போட்டுக்கொள்ள வேண்டும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை யொட்டி 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை கடந்த ஜூலை 15 ஆம் தேதி ஒன்றிய அரசு தொடங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச மாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் தினமும் அரசுமருத்து வமனைகளிலும், வாரந்தோறும் சிறப்பு மெகா முகாம்களிலும் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப் பட்டது. ஒன்றிய அரசின் 75 நாட்கள் அவகாசம் செப்.30 அன்று நிறை வடைந்தது. இதனால், பூஸ்டர் தவணை தடுப்பூசியை அக்டோர் முதல் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளலாம். இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, ‘‘18முதல் 59 வயதினருக்கு 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிறைவடைந்துள்ளது. கால அவகா சத்தை நீட்டிக்குமாறு ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் எந்த தகவலும் வரவில்லை” என்றார். இனிமேல் பூஸ்டர்தவணை தடுப்பூ சியை தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ள வேண்டும். புதன்கிழமைதோறும் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை கள், மருத்துவக் கல்லூரிமருத்துவ மனைகளில் சிறப்பு முகாம் மூலம் கொரோனா தடுப்பூசிஉட்பட 13 வகையான தடுப்பூசிகள் செலுத்தப் படும். வியாழக்கிழமைதோறும் 12 முதல் 17 வயதினர்களுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகள் பள்ளிகளில் போடப்படும். மற்றநாட்க ளில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.