சென்னை,ஜன.9 தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (ஜன.9) ஆளு நர் ரவி உரையாற்றினார். இதன் பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு தலை மையில் நடைபெற்ற அலு வல் ஆய்வுக் கூட்டத்தில் பேரவையை நான்கு நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஜன.10 அன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு மகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மா னம் கொண்டு வரப்பட்டு அன்றைய தினம் பேரவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகிறது.
ஜன.11 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப் பினர்கள் விவாதம் தொடங்குகிறது. அடுத்த நாளும் விவாதம் நடை பெறும். ஜன. 13 அன்று விவா தங்களுக்கு முதலமைச்சர் பதில் அளிக்கிறார். இந்த தொடரில் கேள்வி நேரங்கள் இடம் பெறும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் இப்படி செய்யலாமா?
பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த பேரவைத் தலைவர் மு. அப்பாவு,“ சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகே ஆளுநர் வெளியேறுவது மரபு. ஆனால், தேசிய கீதத்திற்கு முன்பே ஆளுநர் வெளியேறியதால் நாட்டை அவமானப்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.
தமிழக அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை நீக்கியும், சேர்த்தும் ஆளு நர் படித்துள்ளார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரைக் கூட படிக்காதது வேதனை யளிக்கிறது. ஒன்றிய அரசு தயாரித்த உரையை குடியர சுத் தலைவர் படிக்கிறார். ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளு நர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. உயர்பத விக்கு ஆசைப்பட்டு ஆளுநர் இப்படி நடந்து கொள்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்.
அருகருகே இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்
சட்டப்பேரவைக் கூட்டத் தில் எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி துணைத் தலைவர் பன்னீர் செல்வம் இருவரது இருக் கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்க னவே அமர்ந்த இருக்கை களில் அமர்ந்திருந்தனர்.
அதிமுக, பாஜக வக்காலத்து
சட்டப்பேரவையில் மாநில அரசுக்கு எதிராக செயல்படும் வகையில் நடந்துகொண்ட ஆளுநர் ரவியின் செயலை நியாயப் படுத்தும் வகையில் எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் கருத்து தெரி வித்துள்ளனர்.
ஆளுநருக்கு வரவேற்பு
முன்னதாக சட்டப்பேர வையில் உரையாற்ற வந்த ஆளுநருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அரசு கொறடா கோவி. செழியன், ஆகி யோர் வரவேற்றனர். பிறகு, பேரவைத் தலைவர், செய லாளர் சீனிவாசன் ஆகி யோர் பேரவை மண்டபத் திற்கு அழைத்து வந்தனர்.