சென்னை, ஜூன் 18- தமிழக காவல்துறை வரலாற்றில் பாலி யல் குற்றத்திற்காக முதல்முறையாக டிஜிபி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. இந்த தீர்ப்புக்கு ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் ஆர்.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த 2021 ஏப்ரல் மாதம் தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவருடன் பணிபுரிந்த சக பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அன்றைய உள்துறை செயலாளர் மற்றும் அன்றைய டிஜிபி திரி பாதி இருவரிடமும் அந்த பெண் அதிகாரி புகார் மனு கொடுத்தார்.தமிழகத்தில் அன்றைய தினம் இந்த வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சக்திமிக்க போராட்டத்தை தமிழகத்தில் நடத்தியதன் விளைவாக இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற் றப்பட்டது.
இந்திய தண்டனை சட்டம் 345 (1) 352 (2) பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ராஜேஸ் தாஸ் மீது சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்தது.ஆனாலும் அப்போது அவர் கைது செய்யப்படவில்லை. மேலும் ராஜேஷ்தாஸின் உத்தரவின் பெய ரில் அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரை நிறுத்தி சாவியை பறித்து ராஜேஷ்தாஸ் செய்த குற்றத்திற்கு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி புகாரை கொடுக்க விடாமல் தடுத்து குற்றவாளி ராஜேஷ் தாஸிற்கு உடந் தையாக இருந்த அன்றைய செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் ஐபிஎஸ் மீது சிபிசிஐடி போலீஸ் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இருவரும் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத் தில் நடந்து முடிந்து கடந்த 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ராஜஸ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 20,500 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண் ணன் ஐபிஎஸ்-சிற்கு ரூ.500 மட்டும் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை வரலாற்றில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி தண்டனைக்குட்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த தண்டனையை ஜனநாயக மாதர் சங்கம் வர வேற்கிறது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட போதும், குற்ற வாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி போதும் ராஜேஸ்தாஸ் 1 மணி நேரம் கூட சிறையில் அடைக்கப்படவில்லை. தீர்ப்பு வந்து 3 மணி நேரத்தில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார். இதுவே சாமானிய மக்களாக இருந்தால் சிறை தண்டனையை அனுபவிக்காமல் தப் பிக்க முடியுமா? பல சந்தர்ப்பங்களில் அதிகாரம் படைத்த வர்கள், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டி யவர்கள் அதிகாரத்தின் நிழலில் வாழ்பவர்கள் இத்தகைய சிறை தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை தமிழகத்தில் தொடர்கிறது. தமிழகத்தில் இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்பதை ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையே இத்தகைய குற் றத்தை செய்தால் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டாமா? மேல்முறையீடு செய்க!
இவ்வழக்கில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 506(1), AI,A2 மீது பிராசிகியூசனால் நிரூ பிக்கப்படவில்லை என தீர்ப்பு கூறுகிறது. தமிழக அரசு இவ்வழக்கில் மேல் முறை யீட்டுக்கு சென்று அவருக்கு உரிய தண்டனை யை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் தமிழக அரசை கோருகிறது. மேலும் இவ்வழக்கில் கடுமையான அதி கார நெருக்கடியை சந்தித்தும் துணிவுடன் இறுதிவரை நீதிக்காக போராடிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வழக்கில் குற்றவாளியை கைது செய்ய கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார் பாக டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட் டம் நடைபெற்றது. தமிழக முழுவதிலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டக்குழுக்கள் வலுமிக்க போராட்டங் களை நடத்தின. இந்தப் போராட்டத்திற்கு பின்பு தான் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நீதிக் கான போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அனைத்து மாவட்டக் குழுக்களுக் கும் மற்றும் இதற்கு ஆதரவு தெரிவித்த அனை வருக்கும் நன்றியை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் உரித்தாக்குகிறது.