states

மரக்காணம் கள்ளச்சாராய சாவு: தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை, மே 14- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதில் பலியான மூன்று பேர் குடும்பத்திற்கு அரசு  சார்பில் தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 16 பேர் உடல்நலம் பாதிக்கப் பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணி வேல் ஆகிய மூன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மீத முள்ள 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்தது மிகவும் வேத னையளிக்கிறது. கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள் ளது. கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய குற்ற வாளிகளை தேடும் பணி விரைவு படுத்தப் பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கும் தலா 10 லட்சம் ரூபாய்  நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோ ருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும்  அளிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட் டுள்ளது.

காவல் ஆய்வாளர்கள்  பணியிடை நீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு காவல்துறை பெண் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகிய  இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து  தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி) சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகிய மேலும் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.