states

கோரிக்கையை நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது

சென்னை,ஏப்.30- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை  மானியக் கோரிக்கை யின் போது அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறை வேற்றாதது மிகப்பெரிய ஏமாற்ற மளிக்கிறது என்று அரசு மருத்து வர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்திருக்கிறது.  ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக் கையின் போது, அரசு மருத்து வர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளி யிடுவார்கள் என மிகுந்த ஏக்கத்து டன் எதிர்பார்த்தோம். இருந்த போதும் கோரிக்கையை அரசு நிறைவேற்றா தது, ஒவ்வொரு மருத்துவருக்கும் மிகுந்த  ஏமாற்றத்தையும்,  வலியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது உரை யாற்றிய திமுக உறுப்பினர் மருத்துவர் எழிலன், சிபிஎம் உறுப்பினர் எம். சின்னத்துரை இருவரும், அரசு மருத்து வர்களுக்கு அரசாணை 354 ஐ அமல் படுத்த வேண்டும் என அரசை வலியுறுத் தினர். இருப்பினும் அதற்கு அமைச்சர் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அது போலவே இந்த ஆண்டும் துறை மானியக் கோரிக்கையின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பி னர்  சிந்தனை செல்வன், எம்.ஆர்.காந்தி  அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங் களுக்கு இணையான ஊதியம் தர வேண்டும் என்று அரசை வலியுறுத் தினார்கள். மேலும் அரசாணை 354 ன் படி 12  ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வழக்கம் போல அமைச்சர் பதில் ஏதும் சொல்ல வில்லை. இந்த அரசு, மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என முதல்வர்  தெரிவிக்கிறார்.  உண்மை யில் தமிழ்நாட்டில் மட்டுமே ஊதியக் கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்துள்ளார்.  இருப்பினும் இன்னமும்  அரசாங்கத் தின் மனசாட்சியை தடடி எழுப்ப முடிய வில்லை என்பது தான் வருத்தமான உண்மை. கொரோனா பேரிடரில், தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்களின் மீது இன்று வரை முதல்வரின் பார்வை விழ வில்லை என்பது தான் வேதனையாக யுள்ளது. பொதுவாக எந்த வேலை செய்வ தாக இருந்தாலும் மன நிம்மதியுடன் பணி செய்ய வேண்டும் கூறும் நமது முதல்வர்,  உயிர்காக்கும் மருத்து வர்கள் தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைப்பதை இனியும் விரும்ப மாட்டார்கள் என நம்பு கிறோம். அதுவும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப் படுகிறது. மேலும் அரசு மருத்து வர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது, மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர, செலவினம் அல்ல. எனவே,  மே 2ஆம் தேதி நடை பெறும் அமைச்சரவை கூட்டத்தில்,  தனது தந்தை வெளியிட்ட அரசாணை 354இன் படி அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறி விப்பை வெளியிட வேண்டும் என்று  அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்து வர் எஸ். பெருமாள் பிள்ளை வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரி வித்துள்ளார்.