அக்னி பாதை திட்டத்தின் கீழ் இன்று முதல் ஆட்சேர்ப்பு!
இந்திய ராணுவத்திற்கு 17.5 முதல் 23 வயது வரையுள்ள இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு மட்டும் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிநியமனம் செய்யும் புதிய திட்டத்தை ‘அக்னிபாதை’ என்ற பெயரில் மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலிலும், விடாப்பிடியாக இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவேன் என்று மோடி அரசு பிடிவாதமாக உள்ளது. அந்த வகையில், ‘அக்னிபாதை’ திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர careerindianairforce.cdac.in என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் ஜூன் 24 முதல் ஜூலை 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விமானப்படை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ஜூலை 24 அன்று முதற்கட்ட ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களிலேயே எம்.பி.க்கள் வாக்களிக்கலாம்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்அனுமதியுடன் மாநிலங்களிலேயே எம்.பி.க்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்க ளிப்பதற்கு நாடாளுமன்ற அறை எண்: 63-இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் தில்லிக்கு வந்து வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள், தேர்தல் ஆணை யத்திடம் 10 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி பெற்று மாநில சட்டப்பேரவைகள் மற்றும் யூனியன் பிரதேச வாக்குச் சாவடிகளிலேயே வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
டிவிட்டரில் 2,500 எழுத்துக்களை பகிர்வது தொடர்பாக பரிசோதனை
புதுதில்லி, ஜூன் 23- டிவிட்டர் சமூக ஊடகம் வாயிலாக 2,500 எழுத்துக்கள் கொண்ட தகவலை பகிர்வது தொடர்பாக அந்நிறுவனம் பரிசோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, கனடா, கானாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்களுக்கு புதிய வசதியை அளித்து டிவிட்டர் ஆய்வு மேற் கொண்டுள்ளது. டிவிட்டர் அறிமுகமான போது 140 எழுத்துகளாக இருந்த தக வல் அளவு, 2017ல் 280 எழுத்துகளாக உயர்த் தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை,ஜூன் 23- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளியன்று (ஜூன்24) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை யில், “ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஜூன் 26,27 ஆகிய தேதிகளில் கன்னியா குமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மீனவர்களுக்கு எச்சரிக்கை குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூன் 24 அன்று பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி யுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடை: திட்டம் தொடக்கம்
சென்னை,ஜூன் 23- சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிக ளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக் கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திரு மணத்திற்கான கட்டணம் வசூலிக்கப் படமாட் டாது. மேலும், கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடை பெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கோவில்கள் மற்றும் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. 2022 -2023 ஆம் ஆண்டு சட்ட மன்ற மானியக்கோரிக்கையில் கோவில்களில் மற்றும் கோவிலுக்கு சொந்த மான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத் திறனாளிகள் திருமணங்களில் மண மக்களுக்கு கோவில் சார்பாக புத்தாடை கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மணமகன் பி.சிவா மற்றும் மணமகள் ஆர். சுகந்தி ஆகியோர்களுக்கு திருமணம் நடை பெற்று புத்தாடைகள் வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளியில் ஊட்டச்சத்து பானம்
புதுச்சேரி,ஜூன் 23- புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு ஸ்ரீ சத்ய சாயி அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், தினசரி காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு தரப்படும். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் துணை நிலை ஆளுநர் தமிழிசை இத்திட்டத்தை துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கல்வியமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
குப்பை மேடாக தொல்லியல் துறையின் நினைவுச் சின்னம்
சென்னை, ஜூன் 23- சென்னை அருகே பெரும்பாக்கம் பகுதியில் நூக்கம்பாளையம் சாலையில் ஜூஸ் கார்டன் என்ற கடைக்கு அருகில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரு கிறது. குறிப்பாக, தொல்லியல் துறையின் பலகைக்கு அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதியில் மயில்கள், குரங்குகள், கீரிகள் உட்பட ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. ஆனால், தற்போது குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. ஒருபுறம் ‘பாது காக்கப்பட்டப் பகுதி’ என்று அறிவிக்கும் தொல்பொருள் துறையின் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அருகில் குப்பை கொட்டப்படு கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு “தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது.
அக்டோபர் மாதத்தில் பிரேசிலின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போ தைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவும், முன்னாள் ஜனாதி பதி லூலா டி சில்வாவும் போட்டியிடுகிறார்கள். கருத்துக் கணிப்பு களின்படி லூலாவுக்கு 52 விழுக்காடு வாக்குகளும், போல்சனா ரோவுக்கு 35 விழுக்காடு வாக்குகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கணிப்பிலும் லூலாவுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரின் வலதுசாரி அரசு நடைமுறைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக அந்நாட்டின் பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஜனாதிபதி கில்லர்மோ லஸ்ஸோ தலைமையிலான அரசு, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதுவரையில் இரண்டு பேர் அந்த வன்முறைக்கு பலியாகியிருக்கிறார்கள். இரண்டாவதாக பலியானவர் காவல்துறையினரால் நெற்றியில் சுடப்பட்டு இறந்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட இரண்டு மாணவிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணு வம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் தற்போது இரண்டு பேர் கண்டு பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஜூன் 12 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெவ்வேறு இடங்களில் இந்த முன்னாள் மாணவி கள் ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் பலர் பற்றிய விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.