states

18-ஆவது மக்களவை தேர்தல் திருவிழா : தொடங்கியது வேட்பு மனு தாக்கல்

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற் கட்டத்திலேயே தமிழ்நாடு - புதுச்சேரிக்கு ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சட்ட மன்றத்தில் காலியாக உள்ள விளவங் கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு  தாக்கல் புதனன்று (மார்ச் 20) காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல்நாளில் பல்வேறு தொகுதிகளில் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர், நாடு முழு வதும் சட்டமன்ற, மக்களவை, மாநிலங் களவை தேர்தல் என 238 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது, 239 ஆவது முறையாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக்களை மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்ய லாம். மனு தாக்கலின்போது வேட்பாளரு டன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு கின்றனர். பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.