states

குறுவை தொகுப்பு திட்டத்தில் ஒரு விவசாயிக்கு இரண்டு ஏக்கருக்கு உரமானியம் வழங்குக!

சென்னை,ஜூலை 1- குறுவை தொகுப்பு திட்டத்தில் ஒரு விவசாயி க்கு  இரண்டு ஏக்கருக்கு உரமானியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பாசனத்திற்காக முன்னெப் போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை  மே-24 ஆம் தேதி திறக்கப்பட்டது. காவிரி டெல்டா  மாவட்டங்களுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்பு திட்டத்தை மாநில அரசு அறி வித்தது. அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பில் 45 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி, 25 கிலோ  பொட்டாஷ் ஆகியன நூறு சதவீத மானியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை  ஒருங்கிணைப்பில் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படு மெனவும், நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற விதைகள் வழங்கப்படுமெனவும் மாநில  அரசு அறிவித்து செயல்படுத்துகிறது. ஒரு விவ சாயி எவ்வளவு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி  செய்தாலும், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலத் திற்கு மட்டுமே மானியத்தில் உரங்கள் வழங்கப் படுமென்று மாநில அரசு அறிவித்துள்ளது விவ சாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி துவங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சாகுபடிகள் நடைபெற்று வரு கின்றன. நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் உரங்கள் தேவைப் படும் நிலையில் தனியார் கடைகளில் வேறு  இணைப்பொருட்கள் வாங்கினால் தான் ரசாயன  உரம் வழங்க முடியுமென்று நிர்ப்பந்திக்கின்ற னர். உரப்பற்றாக்குறை என்று கூறி உரத்தை கூடுதல் விலைக்கு விற்கும் நிலையும் உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங் களில் குறுவை தொகுப்புக்கு வழங்கப்படும் உரம் மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர். உரக்  கடைக்காரர்களிடம் விளக்கம் கேட்டால், ‘எங் களுக்கு உரம் சப்ளை செய்யும் நிறுவனங்கள் எங்களை நிர்ப்பந்திக்கிறார்கள். நாங்கள் உங் களை நிர்பந்திக்கிறோம்’ என்று கூறுகிறார்கள். மாநில அரசு கடந்த ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்தில் ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் நெல் சாகு படிக்கு மானிய உரங்களை அறிவித்து வழங்கிய நிலையில் நடப்பு குறுவை தொகுப்பு திட்டத்தில் அரசு ஒரு ஏக்கராக குறைத்து அறிவித்திருப் பது சரியல்ல. இதை மாற்றி கடந்த ஆண்டை  போல 2 ஏக்கர் நெல் சாகுபடிக்கு மானிய உரங் களை வழங்கிட மறு உத்தரவு பிறப்பித்திட வேண்டும்.  உரக்கடைகள் இணைப்பொருட்கள் வாங்கி னால் தான் உரம் தருவோம் என்று நிர்ப்பந்திக் கக் கூடாது, தடையின்றி சாகுபடிக்கு தேவை யான அனைத்து வகை உரங்களும் விவசாயிகளுக்கு கிடைப்பதை மாநில அரசு, வேளாண் துறை உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.