திருவள்ளூர், மே 31- விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பறிக்கும், 6 வழிச்சாலையை மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி செவ்வா யன்று ( மே 31 ) திருவள்ளூர் மாவ ட்டத்தில் விவசாயிகள் கறுப்பு கொடி யேந்தி தங்கள் எதிர்ப்பைத் தெரி வித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி அருகில் உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட் டுள்ளது. இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் முப்போகம் விளைய க்கூடிய சுமார் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இந்த நிலங்களை எந்த திட்டங்களுக்கு கையகப்படுத்தக் கூடாது, அதுவும் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை எடுக்க கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.
45க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை அழித்து 6 வழிச்சாலையை ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது, நீதிமன்ற உத்திரவுக்கு எதிரானது. பள்ளிப்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட புண்ணியம், சொராக்காப் பேட்டை, குமாரராஜபேட்டை, திரு மல்ராஜபேட்டை, சாணார் குப்பம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட் பட்ட ஆலப்பாக்கம், தண்டலம், தொளவேடு உட்பட 43 கிராமங்க ளில் உள்ள வீடுகள், கடைகள், நிலங் களில் என 1800 கும் மேற்பட்ட கருப்பு கொடிகளை விவசாயிகள் ஏற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் பதிவு செய்தனர். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் தலை மை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்மு கம், மாவட்டப் பொருளாளர் சி.பெரு மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெரு மாள், மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்ட துணைத் தலை வர் பி.ரவி, நஞ்சை நில விவசாயி கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஜெய க்குமார், சசிகுமார், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.