சென்னை, நவ.9- சென்னை உள்பட முக்கிய நகரங்களில் போலியாக ஊரக வங்கியை நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி செய்த பட்ட தாரி வாலிபர் கைது செய்யப் பட்டார். பாரத ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி’ என்ற பெயரில் போலி யான வங்கி செயல்பட்டு வருவதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் குறிப்பிட்டி ருந்தார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்து காவல்துறை யினர் விசாரணை நடத்தினர். இதில் சென்னை அம்பத்தூர் உள்பட 9 ஊர்களிலும் போலி வங்கி செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அம்பத்தூர் லேடான் தெருவில் போலி ஊரக வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சென்று சோதனை நடத்திய காவல் துறையினர் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றிருப்பது போல போலி சான்றிதழ் தயாரித்து வங்கியை மோசடியாக நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. சென்னையை போன்று மதுரை, திருமங்கலம், ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கோவை, பெரம்பலூர் ஆகிய 8 இடங்களிலும் போலி வங்கி செயல்பட்டது தெரியவந்தது. இந்த போலி வங்கியை திருமுல்லைவாயலை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 பணமும், பென்ஸ் காரும் பறிமுதல் செய்தனர். ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண் களை குறிவைத்து ரூ.100 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியதாக கூறப்படுகிறது. இந்த மோசடி அரங்கேற்றி யிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவரது மோசடிக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்திருப் பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.