கொல்கத்தா, டிச. 31 - பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, தனது 100-ஆவது வயதில், வெள்ளியன்று அதிகாலை கால மானார். தகவல் கிடைத்ததும் உடனடியாக குஜராத் விரைந்த பிரதமர் மோடி, தமது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின், அவரது உடலை தோளில் சுமந்து காந்திநகர் தகன மயானத்துக்கு கொண்டு சென்றார். மேலும், ஹீராபென் மோடியின் சிதைக்கு, இறுதிச் சடங்குகளைச் செய்தபின் தீ மூட்டினார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. தாயாரின் மறைவை யொட்டி, பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட அரசு நிகழ்ச்சிகள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன்படியே, தாயார் ஹீராபென் மோடியின் சிதைக்கு தீ மூட்டிய சிறிது நேரத்திலேயே தாம் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மேற்கு வங்கத்தின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில், அவர், பிரதமரின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி துயரம் தோய்ந்த முகத்துடன் சோகமே வடிவாக அமர்ந்திருந்தார். மேலும் அவர் விழாவில் பேசும்போதும், “என் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கு வங்க மாநிலத்துக்கு நேரில் வந்து மக்களை சந்திக்க முடியவில்லை. அதற்காக மன்னி ப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று உருக்க மாக தெரிவித்தார். ஆனால், என்ன மாதிரியான சூழலில் விழா நடைபெறுகிறது என்பதைக் கூட உண ராத பாஜக-வினர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வெறுப்பேற்றுகிறோம் என்று நினைத்து, பிரதமர் மோடியின் தாயார் மறைவையும் மறந்து விட்டு, ‘ஜெய்ஸ்ரீராம்.. ஜெய்ஸ்ரீராம்.. ஜெய்ஸ்ரீராம்..’ என்று காட்டுக்கூச்சல் போட்டு, மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். மேற்கு வங்கத்தில் மம்தாவை கடுப்பேற் றும் வகையில், பாஜகவினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கூச்சலிடுவதும், பதிலுக்கு திரிணா முல் காங்கிரஸ் கட்சியினர் ‘ஜெய் காளி!’ என்று கூச்சலிடுவதும் வழக்கமான ஒன்று தான் என்றாலும், இடம், பொருள் தெரியா மல் பாஜகவினர் நடந்து கொண்டது பலருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.