states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“பாஜக ஆளும் மாநிலங் களில் சாதாரண மக்க ளுக்கு கூட பாதுகாப்பு கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் அண்ணா மலை போன்று வெறுப்பு பிரச்சாரம் செய்பவர் களுக்கு கூட பாதுகாப்பு உள்ள நிலையில், பிரதம ருக்கு பாதுகாப்பு அளிக்க  தமிழ்நாடு அரசிற்கு தெரி யாதா?” என தமிழ்நாடு வந்த பிரதமருக்கு சரி யான பாதுகாப்பு வழங்க வில்லை என அண்ணா மலை கூறியதற்கு அமை ச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்ட ணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழ் நாடு அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டு மென மனுவில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

திருப்பூர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரை களை மருத்துவர்களின் பரிந்துரைச்சீட்டு இன்றி  போதைக்காக விற்கப் படுவதாக எழுந்த புகா ரில், மருந்து கட்டுப் பாட்டு ஆய்வாளர் தலை மையில் மருந்தகங்களில் சோதனை மேற்கொள்ள ப்பட்டது.

மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணு டன் இணைக்காததால் மின் இணைப்பு துண்டி க்கப்படலாம் என மோசடி பேர்வழிகள் செல்போன் களுக்கு அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்தால்  பணத்தை இழக்க நேரி டும் என தமிழ்நாடு  டிஜிபி சைலேந்திர பாபு எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

உலகச் செய்திகள்

பெல்ஜியத்தின் காவல்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தாமஸ் மஞ்சோய் என்ற அதிகாரி பணியில் இருந்தபோது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பணியில் இருக்கும் காவலர்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்ற கோரிக்கைகளை முன்னிறுத்திக் காவல் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மெக்சிகோவில் வேலையின்மை விகிதம் 3.3 விழுக்காடாக சரிந்துள்ளது. அக்டோபர் 2022க்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் வெளியானது. அதன்படி, வேலையில்லாதோரின் எண்ணிக்கை 20 லட்சம் என்றும், வேலையின்மை விகிதம் 3.3 விழுக்காடாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2021ல் வேலையில்லாதோரின் எண்ணிக்கையில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். இடதுசாரி ஜனாதிபதி அம்லோவின் நடவடிக்கைகளால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

“இந்தப் பகுதியில் அந்நியர்கள் இருப்பது எந்தவகையிலும் பாதுகாப்பை ஏற்படுத்துவதில்லை. சொல்லப்போனால் பிரச்சனைகளைத்தான் அதிகப்படுத்துகின்றன” என்று ஈரானின் ஜனாதிபதி ரெய்சி கூறியுள்ளார். இராக்கில் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள முகமது ஷியா அல் சுடானி ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோதுதான் ரெய்சி இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.