ஈரோடு, பிப்.25- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு திங்களன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு மற்றும் பலர் போட்டியிடுகின்றனர். இந்நிலை யில், சனியன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலை வர்கள் ஈடுபட்டனர். முன்னதாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது.