states

img

ஈரோடு கிழக்கு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதுரை,ஜன.22- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர் தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஜனவரி 22 ஞாயிறன்று அறிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் ஆவார்.  இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதலுடன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்  தெரிவித்துள்ளார். 

முன்னதாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது குறித்து இரண்டாவது நாளாக ஞாயிறன்றும் ஆலோசனை நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘நான் போட்டியிட விருப்ப மனு கொடுத் திருக்கிறேன். ஆனால் யார் வேட்பாளர் என்று தலைமைதான் அறிவிக்கும்’’ எனத் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது நிச்சயம் என்றும், வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஞாயிறன்று மாலை,  ஈரோடு கிழக்கு தேர்தலில் ஈவிகேஎஸ்  இளங்கோவனே வேட்பாளராக போட்டி யிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று அறி விக்கப்பட்டவுடனே  திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரப் பணிகளில் இறங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இளங்கோவன் பேட்டி

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், “என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாள ராக அறிவித்துள்ள காங்கிரஸ் தலை மைக்கு நன்றி. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் எல்லோருடைய ஒத்துழைப்போடு மிகப்பெரும் வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெறும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.