சென்னை, ஜூன் 17- பாலியல் வழக்குகளில் குற்றமிழைத்தோ ருக்கு கடும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: பெண் போலீஸ் எஸ்.பி.க்கு பாலியல் தொந்த ரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் கடந்து தீர்ப்பு வந்துள்ளது. இந்திய தண்டனை சட்ட பிரிவு 506(1), A1, A2 மீது பிராசிகியூஷனால் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு கூறுகிறது. மேலும், ராஜேஷ் தாசுக்கு உடனே பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்து, பாதிக் கப்பட்ட காவல்துறை அதிகாரி புகார் கொடுக்க சென்னைக்குச் செல்ல முடியாதபடி தடுத்த மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான கண்ணனுக்கு வெறும் ரூ.500 அபராதம் மட்டுமா என்ற கேள்வியும் இத்துடன் வலுவாக எழுகிறது. உயர் பதவிகளில் இருப்போர் இதுபோன்ற தவறுகளை செய்யும்போது தண்டனை கடுமை யாக இருக்க வேண்டாமா?. குற்றத்தை தடுக்க வேண்டிய இடத்தில் இருப்போரே குற்றம் செய் தால் அதை கடுமையாக அணுக வேண்டாமா? இதுபோன்ற வழக்குகளில் குற்றமிழைத்தோ ருக்கு எதிரான கடும் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.