states

செந்தில் பாலாஜி கைது செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுதில்லி, ஆக.7- அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில், செந்  தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், அவரை  அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து  விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்தனர். அப்போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்  புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முன்னதாக, செந்தில் பாலாஜியை அம லாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதக் காவலில் வைத்ததாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்  தில் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா  பானு மற்றும் பரத சக்கரவர்த்தி இருவரும்  மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா  பானு, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், செந்தில் பாலாஜியை விடு விக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி னார். நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட் கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார். இதையடுத்து மூன்றாவது நீதிபதியாக  சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவர், செந்தில் பாலாஜியை கைது செய் தது சட்டப்பூர்வமானது என்றும், அவரை நீதி மன்றக் காவலில் விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து, செந்  தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார். செந்தில் பாலாஜி மனைவி தரப்பிலும் தனியாக மனுத் தாக்கல் செய் யப்பட்டது.  இந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த இரண்டு வாரங்களாக உச்ச நீதி மன்றம் விசாரித்து வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறைக்கு, போலீஸ் அதி காரம் கிடையாது; போலீசால் மட்டுமே  குற்றம் செய்திருப்பதாக கருதினாலும் கைது  செய்து விசாரிக்க முடியும்; பின்னர் விசார ணையில் ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள லாம். ஆனால், அமலாக்கத்துறையிடம் ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நட வடிக்கைக்குச் செல்ல முடியும்; கைது செய்து விட்டு ஆதாரங்களைத் திரட்ட முடியாது  என்றெல்லாம் வாதங்களை வைத்திருந்தார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவரை சட்டவிரோ தமாக கைது செய்துள்ளனர் என்று குற்றம்  சாட்டியிருந்தார்.

அமலாக்கத்துறை தரப்பில்  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜ ராகி, சட்டப்படியே கைது நடவடிக்கை எடுக்  கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், திங்களன்று (ஆக.7) இந்த  வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அப்போது, ஒருவர் கைது செய்யப்பட்டு,  நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் போது, அதனை சட்டவிரோத கைதாக எப்படி கூற  முடியும்? என்று கேள்வியெழுப்பிய நீதிபதி கள், நீதிமன்ற காவல் என்பதே ஒரு கைதை சட்டப்பூர்வமாக்கி விடுகிறது என்பதால்,  செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தவறு என்று சொல்ல முடியாது; இதன்படி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவும் செல்லாது என்று  கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளு படி செய்தனர். மேலும், செந்தில் பாலாஜியை ஆகஸ்ட்  12-ஆம் தேதி வரை, அமலாக்கத்துறை 5 நாட்க ளுக்கு காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அண்மையில்தான் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருப்பவர் என்ப தால், செந்தில் பாலாஜியின் உடல்நிலை யில் கவனமாக இருக்க வேண்டும் என்றும்  அமலாக்கத்துறையை நீதிபதிகள் அறி வுறுத்தியுள்ளனர்.