states

‘‘பட்டியலின குடியிருப்புகளுக்கு தனித் தண்ணீர் தொட்டி கூடாது!’’

புதுக்கோட்டை, ஜன.13- தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழுவைச்  சேர்ந்த உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன், ஜி.கருணாநிதி, டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் ஆகிய 4 பேரைக் கொண்ட துணைக்குழு வேங்கைவயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைப் பார்வையிட்ட அக்குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அய்யனார் கோவில், இறையூர் பகுதியிலுள்ள தண்ணீர்த்தொட்டியையும் பார்வை யிட்டனர்.  இதைத் தொடர்ந்து சுவாமிநாதன் தேவதாஸ் கூறுகையில், “இங்கு வன்கொடுமை இருந்ததால்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இரட்டை குவளை, கோவில் நுழைவுக்கு அனுமதி மறுப்பு போன்ற புகார்களின் மீது மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப் பாளரும் நேரடியாக நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் எங்குமே பட்டியலின மக்களுக்கு  தனி தண்ணீர் தொட்டி, தனி மயானம் இருக்கக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். இவற்றை நாங்களும் அரசுக்குப் பரிந்துரைகளாகக் கொடுப்போம்’’ என்றார். ஆட்சியருடன் ஆலோசனை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியருடன் சமூக  நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை  மேற்கொண்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வந்திதா பாண்டே-விடம் குற்றவாளிகளை விரைந்து கண்டறியு் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.