states

4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை, அக். 11- ஒன்றிய அரசு அறிவித்துள் ளது போல் தமிழக அரசும் ஊழி யர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: விலைவாசிப் புள்ளி உயர்விற்கேற்ப ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அக விலைப்படி உயர்வை அறிவித்து  வருகிறது. அதனைத் தொடர்ந்து  ஒன்றிய அரசை பின்பற்றி தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது நடைமுறையாகும். அந்த வகையில் ஒன்றிய அரசு சில தினங்களுக்கு முன்பு  தனது ஊழியர்களுக்கு விலை வாசிப் புள்ளிக்கேற்ப 4  விழுக்காடு அகவிலைப்படி உயர்வை அறிவித்து விட்டது. அதனைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் தனது ஊழியர்களுக்கு 4  விழுக்காடு  அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. எனவே, கடந்த கால நடை முறையைப் பின்பற்றி தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு 4  விழுக்காடு  அகவிலைப்படி உயர்வை 1.7.2022 முதல் உடன டியாக அறிவித்து, ரொக்கமாக தீபாவளிக்்குள் வழங்க வேண்டும். இதன் மூலம் தற்போது வழங்கப் பட்டு வரும் அகவிலைப்படி 34  விழுக்காடு 38  விழுக்காடாக உயரும். அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தாமதமாக அறி வித்து அதன் மூலம் 6 மாத கால அகவிலைப்படியை பறிக்கும்  செயலை கடந்த அகவிலைப்படி உயர்வின்போது தமிழக அரசு மேற்கொண்டது. இது தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியைத்  ஏற்படுத்தியது. எனவே, இந்தமுறை தமிழக  அரசு அதுபோன்ற நடைமுறை யைக் கடைப்பிடிக்காமல் உடனடி யாக ஒன்றிய அரசு அறிவித்த தேதி  முதல் அகவிலைப்படி உயர்வை  அறிவித்து நிலுவைத் தொகையை தீபாவளிக்கு முன்பாக ரொக்கமாக வழங்க ஆணை வெளியிட்டு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.