புதுக்கோட்டை, ஜூன் 24- தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடன் சர்வாதிகார மனநிலையில் செயல்பட்டு வரும் செங்கல்பட்டு வீட்டு வசதி துணைப் பதிவாளரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் தி.க. ராமசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலா ளர் க.பிச்சைவேலு, பொருளாளர் ச. பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கை களை முன்மொழிந்து பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ. ஜபருல்லா, செயலாளர் ஆர்.ரெங்க சாமி, சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் கி.ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில நிர்வாகிகள் தீர்மானங்களை முன்மொழிந்தனர். திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூ திய முறையைத் தொடர வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப் பட்ட ஈட்டிய விடுப்பு நிதிப் பலன்களை திரும்ப வழங்க வேண்டும்.
தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடனும், தரக் குறைவான வார்த்தைகளைப் பயன் படுத்தி, சர்வாதிகார மனநிலையுடன் செயல்படும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், இள நிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் களுக்கு பதவி உயர்வு வழங்க வேண் டும். அரசாணைக்கு புறம்பாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இயக்குனர் பணி யிடத்தில் தொடர்ந்து பணிபுரிந்துவரும் பால் கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் பிரமிளாவை உடனடியாக பணிமாறுதல் செய்ய வேண்டும். நடப்பாண்டுக்கான துணைப் பதிவாளர் பதவி உயர்வினை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் பா.ஆனந்தம் வரவேற்க, மாநிலச் செயலாளர் விகேஏ.மனோ கரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் டி.வினிதா நன்றி கூறினார்.