states

தொழிலாளர்களுக்கு எதிரான அரசாணைகளை திரும்பப் பெறுக!

சென்னை, மார்ச் 7 – அதிமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 8  அரசாணைகளை திமுக  அரசு திரும்ப பெற வேண் டும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபிள்யூயு ஆகிய 9 சங்கங்கள் கூட் டாக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துத் துறை யில் செயல்பட்டு வந்த பேருந்துகள், 1.1.1972ல் போக்குவரத்துக் கழகமாக் கப்பட்டது. தனியாரிட மிருந்த பேருந்துகளையும் 1973ஆம் ஆண்டில் தேசிய  மயமாக்கி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போக்குவரத்து கழகங்க ளுடன் இணைத்தார்.

2001 ஆம் ஆண்டு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 50 விழுக் காடு பேருந்துகளை தனி யாருக்கு தாரை வார்க்க முன்னாள் முதல்வர் ஜெயல லிதா முயன்றார். அப்போது  தொழிலாளர்கள் தன்னெ ழுச்சியாக வேலை நிறுத்தம் செய்தனர். திமுக தலைவர் கருணாநிதி, “மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தனியார் வசம் விடப்படும் பேருந்துகளை மீண்டும் தேசியமயமாக்குவோம்” என்று அறிவித்ததால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் இருப்பதை கணக்கில் கொண்டு, தொழிலாளர்கள் 2 ஆண்டுக்கான ஊதிய பலன்களை விட்டுக் கொடுத்து, ஊதிய உயர்வை  ஏற்றுக் கொண்டனர். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடைபெற்ற போது அதிமுக ஆட்சிக்  காலத்தில் தொழிலாளர்க ளுக்கு எதிராக பிறப்பிக் கப்பட்ட அரசாணைகள் 321 முதல் 328 வரையில் திரும்பப் பெற வலியுறுத் தப்பட்டது. ஆனால் அதை  திரும்பப் பெறப்படவில்லை. ஆகவே, அந்த அரசாணை களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர் கள், அலுவலகப் பணி யாளர்களை பணியில் அமர்த்தும் உத்தரவை திரும்பப் பெற்று, வழக்கம் போல் நேரடியாக பணி அமர்த்த வேண்டும். தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி போக் குவரத்துக் கழகங்களில் இயக்குவதற்கு வெளியிட் டுள்ள அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத் தில் வலியுறுத்தப்பட் டுள்ளது.